அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் ஆயர்-விக்னேஸ்வரன் சந்திப்பு(படங்கள் )

தமிழ் தேசியக்கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளரும்,முன்னால்; உச்ச நீதிமன்ற நீதியரசருமான சீ.வி.விக்னேஸ்வரனுக்கும்,மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசேப்பு ஆண்டகைக்கும் இடையில்  நேற்று செவ்வாய்க்கிழமை மாலை 4 மணியளவில் மன்னார் ஆயர் இல்லத்தில் விசேட சந்திப்பு ஒன்று இடம் பெற்றுள்ளது.


இதன் போது மன்னார் மாவட்ட மக்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள்,மக்களின் மீள் குடியேற்றம் ,இடம் பெயர்ந்த மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் உற்பட மன்னார் மாவட்ட மக்கள் எதிர்நோக்கும் சகல வித பிரச்சினைகள் தொடர்பாககவும் அவர் கேட்டரிந்தார்.


இதனைத்தொடர்ந்து முதலமைச்சர் வேட்பாளரும்,முன்னால்; உச்ச நீதிமன்ற நீதியரசருமான சீ.வி.விக்னேஸ்வரன் ஆயரிடம் ஆசிபெற்றார்.


இதன் போது பாராளுமன்ற உறுப்பினர்கலான செல்வம் அடைக்களநாதன், மாவை சேனாதிராசா,;, சுரேஸ் பிரேமச்சந்திரன், அரியேந்திரன்,சிவசக்தி ஆனந்தன் ,எம்.ஏ.சுமந்திரன்,யோகேஸ்வரன் , முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தாத்தன்,தமிழ் தேசியக்கூட்டமைப்பின் மன்னார் மாவட்ட முஸ்ஸிம் வேட்பாளரான அயூப் அஸ்மி ஆகியோரும் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.


(மன்னார் நிருபர்)

(28-08-2013)
















மன்னார் ஆயர்-விக்னேஸ்வரன் சந்திப்பு(படங்கள் ) Reviewed by Admin on August 28, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.