அண்மைய செய்திகள்

recent
-

எமது நிலத்தை பாதுகாத்து,எமது மக்களை நாம் ஆள்வதற்கு இத்தேர்தலை ஓர் கருவியாக பயன்படுத்துவோம்- மன்னார் நகர சபை உறுப்பினர் இ.குமரேஸ்

தமிழினத்திற்கு வலி தந்தவர்களுடன் இணைந்து கூலி அரசியல் புரியும் வேட தாரிகளை எம் மண்ணிலிருந்து விரட்டுவதற்கு,இத்தேர்தலை ஓர் சந்தர்ப்பமாக பயன்படுத்துவோம் என மன்னார் நகர சபை உறுப்பினர் இரட்னசிங்கம் குமரேஸ் தெரிவித்தார்.

மன்னார் கள்ளிக்கட்டைக்காட்டில் தமிழ் தேசியக்கூட்டமைப்பு வேட்பாளர்களான ஆசிரியர் யூட்குரூஸ், வைத்திய கலாநிதி  என்.குணசீலன், சட்டத்தரணி பிறிமூஸ் சிராய்வா ,விமலேஸ்வரன் ஆகியோரை ஆதரித்து நானாட்டான் பிரதேச சபையின் உபதவிசாளர் என்.றீகன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் மன்னார் நகரசபை உறுப்பினர் எஸ்.ரெட்ணசிங்கம் குமரேஸ் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,,,,,

1987ம் ஆண்டு இந்திய, இலங்கை ஒப்பந்தம் ஊடாக ஓர் இடைக்கால தீர்வாக தமிழ் மக்களுக்காக 1988 ல் கொண்டு வரப்பட்டு அறிமுகப்படுத்தப்பட்ட மாகாணசபை முறை அன்று தொடக்கம் இன்று வரை 25 வருடங்களுக்கு மேலாக தமிழர்கள் எந்தப்பலனையும் அடைய முடியாதவகையில் பேரினவாதம் தாண்டவம் ஆடுகிறது.

 ஆனால் மாகாணசபை முறையை இந்நாட்டில் இருந்து முற்று முழுதாக ஒழிக்க வேண்டுமென கொக்கரிக்கும் இனவாதிகள் இதனை ஆண்டு அனுபவிக்கிறார்கள்.

இப்போதும் கூட இத்தேர்தலானது அயல் நாடான இந்தியாவினதும், சர்வதேசத்தின் அழுத்தம் காரணமாகவுமே நடைபெறுகிறது.
ஆனால் இது தமிழர்களுக்கான தீர்வுமல்ல,போராட்டத்தின் முடிவுமல்ல,தமிழர்களின் உரிமைப் போரின் இலக்கை அடைவதற்கான ஜனநாயக வழிமுறை ஊடான புதியவடிவத்திலான ஆரம்பம்.

அத்தோடு 30 வருடங்களுக்கு மேலாக வறுமையாக்கப்பட்டு, வெறுமையாக நிற்கின்ற எம்மினத்தின் இல்லிடத்தை,பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கும்,தமிழ் மக்களுக்கு அபிவிருத்தி என்ற போர்வையில் எம்மினத்தை அடிமைப்படுத்துகின்ற செயல்திட்டத்திற்கும்,மீளெழுச்சி செயற்திட்டத்தைப் பயன்படுத்தி தமது காணிகளுக்கு வீதியமைத்தலும்,தாமே நேரடியாக நின்று 30 இலட்சம் பெறுமதியான வீதிகளை 10 இலட்சத்தில் போட்டுவிட்டு 20 இலட்சத்தை தமது பைகளில் சுருட்டிக்கொண்டு நேர்மையாக செயற்படும் உத்தியோகஸ்த்தர்களை மிரட்டியும், அச்சுறுத்திக்கொண்டும், தமிழினத்திற்கு வலி தந்தவர்களுடன் இணைந்து கூலி அரசியல் புரியும் வேட தாரிகளை எம் மண்ணிலிருந்து விரட்டுவதற்கும்,இத்தேர்தலை ஓர் சந்தர்ப்பமாக பயன்படுத்துவோம்.

அது மாத்திரமல்லாமல் விரைவாக எமது தேசத்தை சிங்களமயமாக்கும் திட்டத்திற்கும், இத்தேர்தல் மூலம் பாடம் புகட்டவேண்டும்.

 இன்றும்,முசலிப் பகுதியில் 500 சிங்களக் குடும்பங்களுக்கு அரை ஏக்கர் காணி கொடுத்து உடன் குடியேற்றுமாறும்,அதற்கு அங்குள்ள இராணுவப் படைப்பிரிவும் ஒத்துழைப்புச் செய்வார்கள் என்றும், இதனை உடன் அமுல்படுத்துமாறு கடந்த வாரம் அவசர கடிதம் ஒன்றை அரசஅதிபர் முசலி பிரதேச செயலாளருக்கு அனுப்பி வைத்துள்ளார்.

 ஆனால் செயலாளரோ சிங்கள மக்கள் இங்கு குடியிருந்தவர்கள் அல்ல,என்கின்றகாரணத்தைக் காட்டிதாமதப்படுத்திவருகின்றார்;.

 இதன் காரணமாக அவரின் உத்தியோத்திற்கு ஆபத்து ஏற்படக்கூடிய சாத்தியக்கூறுகள் உள்ளன.

இப்படியாக நானாட்டான் செயலாளர் பிரிவு,மன்னார் செயலாளர் பிரிவுக்குட்பட்ட பல பிரதேசங்களில் இராணுவத்திற்கென பல ஏக்கர் காணிகளை ஒதுக்கி திட்டமிட்ட சிங்களக் குடியேற்றத்தினை ஏற்படுத்தும் வேலைகள் ஆரம்பமாகியுள்ளன.

இதனையெல்லாம் தடுப்பதற்கும்,எமது நிலத்தை பாதுகாப்பதற்கும்,எமது மக்களை நாம் ஆள்வதற்கும், இத்தேர்தலை ஓர் கருவியாக பயன்படுத்தி உங்கள் வாக்குப்பலத்தின் மூலம் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை அதிகூடிய ஆசனங்களுடன் வெற்றிபெறச் செய்வது ஒவ்வொரு தமிழரின் கடமையும்,உரிமையும் ஆகும்.


எமது நிலத்தை பாதுகாத்து,எமது மக்களை நாம் ஆள்வதற்கு இத்தேர்தலை ஓர் கருவியாக பயன்படுத்துவோம்- மன்னார் நகர சபை உறுப்பினர் இ.குமரேஸ் Reviewed by Admin on August 18, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.