'கபே' அமைப்பின் தேர்தல் நிலவரங்களை அறிந்து கொள்ளும் ஊடகவியலாளர் குழு செல்வம் அடைக்கலநாதன் எம்.பி யை சந்திப்பு - படங்கள்
'கபே' அமைப்பின் தேர்தல் நிலவரங்களை அறிந்து கொள்ளும் ஊடகவியலாளர் குழு நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை மன்னார் ஆகாஸ் விடுதியில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் அவர்களை சந்தித்து அவருடைய கட்சி சார்ந்த தேர்தல் நிலவரங்களை கேட்டறிந்தனர்.
இதன் போது கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன்,,,
தமிழ் தேசியக்கூட்டமைப்பு மன்னார் மாவட்டத்தில் போட்டியிடுகின்ற நிலையில் வேட்பாளர்களுக்கு பல வித அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது. புலனாய்வுத்துறையினர் கூட்டமைப்பின் வேட்பாளர்களுடைய வீடுகளுக்குச் சென்று அவர்களையும்,அவர்களுடைய குடும்பத்தினரையும் அச்சுறுத்தி விபரங்களை திரட்டி வருகின்றனர்.
அதுமட்டுமின்றி அரச கட்சி அரச உடமைகளை பயன்படுத்தி தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபடுவதோடு அரச திணைக்கள பணியாளர்களும் தேர்தல் பிரச்சாரங்களுக்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றனர்.
இது தொடர்பாக நான் தேர்தல் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டுவரவுள்ளேன்.என பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கபே அமைப்பின் தேர்தல் நிலவரங்களை அறிந்து கொள்ளும் ஊடகவியலாளர் குழுவிடம் முன்வைத்தார்.
இதன் போது மன்னார் மாவட்ட பிராந்திய ஊடகவியலாளர்களும் கலந்து கொண்டிருந்தனர்.
'கபே' அமைப்பின் தேர்தல் நிலவரங்களை அறிந்து கொள்ளும் ஊடகவியலாளர் குழு செல்வம் அடைக்கலநாதன் எம்.பி யை சந்திப்பு - படங்கள்
Reviewed by Admin
on
August 18, 2013
Rating:
No comments:
Post a Comment