அண்மைய செய்திகள்

recent
-

பாடசாலை மாணவர்களிடமிருந்து பணம் பெறவேண்டாம் :இலங்கை ஆசிரியர் சங்கம்

பாடசாலை மாணவர்களிடமிருந்து பணம் பெறவேண்டாம் என்று கல்வி அமைச்சு பல சுற்றறிக்கைகளை வெளியிட்ட பின்னரும் அதற்கு மாறாக பல பாடசாலைகள் பணம் பெறுவதாக இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.

இது பற்றி கருத்து தெரிவித்த இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்ராலின், தற்போது நகர்ப்புற பாடசாலைகள் மட்டுமன்றி கிராமப் புற பாடசாலைகளும் மாணவர்களிடமிருந்து நன்கொடை என்ற பெயரில் பெருந்தொகைப் பணத்தை பெற்றுக்கொள்கிறது.

மேலும் பணம் பெறுவதற்காக சட்டைகள், தொப்பிகள், முத்திரைகள் போன்ற பல பொருட்களை விற்பனை செய்கின்றனர்.இவற்றை விற்பனை செய்வது தவறல்ல ஆனால் அவற்றை அதிக விலைக்கு விற்பனை செய்ய கூடாது என தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசாங்கம் மாணவர்களுக்கு இலவச கல்வியை வழங்குகின்ற போதும் சில பாடசாலைகள் பெருந்தொகைப் பணத்தை மாணவர்களிடமிருந்து பெற்றுக்கொள்கிறது. இது முற்றிலும் தடைசெய்யப்பட்டுள்ளது.

 இதனால் பணம் செலுத்த முடியாத ஏழை மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாடசாலை மாணவர்களிடமிருந்து பணம் பெறவேண்டாம் :இலங்கை ஆசிரியர் சங்கம் Reviewed by Admin on August 08, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.