அண்மைய செய்திகள்

recent
-

ஜனாதிபதியின் இணைப்பாளராக ஊடகவியலாளர் ஆர்.சிவராஜா நியமனம்

தமிழ் விவகாரங்கள் மற்றும் தமிழ் ஊடகங்களுக்கான ஜனாதிபதியின் இணைப்பாளராக ஊடகவியலாளர் ஆர்.சிவராஜா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

 வீரகேசரி பத்திரிகையில் செய்தியாளராக 1996ஆம் ஆண்டு தனது ஊடகப்பணியை ஆரம்பித்த சிவராஜா, மகாராஜா நிறுவனத்தின் சக்தி தொலைக்காட்சி மற்றும் தினக்குரல் பத்திரிகை நிறுவனம் என்பனவற்றில் அரசியல் செய்தியாளராக பணிபுரிந்துள்ளார்.

பின்னர் சுடரொளி பத்திரிகையின் ஆசிரியராக இதுவரை கடமையாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இலங்கைத் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் முன்னாள் செயலாளரான சிவராஜா, இலங்கை பத்திரிகை ஆசிரியர் பேரவை மற்றும் இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் என்பவற்றின் செயற்குழு உறுப்பினராகவும் நியமிக்கப்பட்டிருந்தார்.

 சிவராஜா, நுகேகொட தமிழ் மகா வித்தியாலயத்தின் பழைய மாணவராவார்.



ஜனாதிபதியின் இணைப்பாளராக ஊடகவியலாளர் ஆர்.சிவராஜா நியமனம் Reviewed by Admin on August 06, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.