சில நாட்களாக கரை ஒதுங்கும் சடலங்களும் மர்மங்களும் - யார் இவர்கள் ? மன்னாரிலிருந்து சென்றவர்களா?
குடாநாட்டின் தீவக கடற்பிரதேசங்களில் கடந்த சில நாட்களாக கரையொதுங்கும் சடலங்கள் வரிசையில் நேற்றும் புங்குடுதீவு கடற்கரையில் மேற்படி சடலம் மீட்கப்பட்டமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புங்குடுதீவு 10 வட்டாரத்தில் கடற்கரையில் அழுகிய நிலையில் சுமார் 35 முதல் 45 வரையான வயது மதிக்கத்தக்க ஆணொருவரது சடலமொன்று கரை ஒதுங்கியிருப்பதை அறிந்த பொது மக்கள் தகவல் கொடுத்தனர். இதனைத் தொடர்ந்து குறித்த சடலத்தை மீட்டு யாழ் போதனா வைத்தியசாலை ஒப்படைத்துள்ளனர். நேற்று மீட்கப்பட்ட இந்தச் சடலத்துடன் தீவக கடற்பரப்புக்களில் இதுவரை 7 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
மேற்படி சடலங்கள் எங்கிருந்து வந்து கரையொதுங்குகின்றன. யார் இவர்கள் சட்டவிரோதமாக ஆஸ்திரேலிய சென்றவர்களா இல்லை மன்னாரிலிருந்து படகில் இந்தியா செல்ல முற்பட்டவர்களா எனும் கேள்வி மக்கள் மத்தியில் பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது.
சில நாட்களாக கரை ஒதுங்கும் சடலங்களும் மர்மங்களும் - யார் இவர்கள் ? மன்னாரிலிருந்து சென்றவர்களா?
Reviewed by Admin
on
August 06, 2013
Rating:

No comments:
Post a Comment