கரையொதுங்கிய இரு சடலங்கள் மீட்பு
வேலணை, சாட்டி கடற்பரப்பிலிருந்து கரையொதுங்கிய ஆணொருவரின் சடலத்தையும் புங்குடுதீவு கடற்பரப்பிலிருந்து கரையொதுங்கிய பெண்ணொருவரின் சடலத்தையும் நேற்று வியாழக்கிழமை பொலிஸார் மீட்டுள்ளனர்.
இவ்வாறு மீட்கப்பட்ட இரண்டு சடலங்களும் மிகவும் அழுகிய நிலையில் காணப்படுவதுடன், இதுவரையில் இந்த இரண்டு சடலங்களும் அடையாளம் காணப்படவில்லையெனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த இரண்டு சடலங்களும் யாழ். போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.
கரையொதுங்கிய இரு சடலங்கள் மீட்பு
Reviewed by Admin
on
August 02, 2013
Rating:

No comments:
Post a Comment