அண்மைய செய்திகள்

recent
-

கிளிநொச்சிக்கான இரண்டாம் கட்ட பரீட்சார்த்த ரயில் சேவை

ரயில்வே திணைக்களத்தினால் கிளிநொச்சிக்கான இரண்டாம் கட்ட பரீட்சார்த்த ரயில் சேவை முன்னெடுக்கப்பட்டது. வடபகுதிக்கான ரயில் பாதை புனரமைப்பு நடவடிக்கைகளின் கீழ் கிளிநொச்சி வரை ரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளதை அடுத்து இந்த பரீட்சார்த்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன.

 கொழும்புக்கும்- கிளிநொச்சிக்கும் இடையிலான ரயில் சேவை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 14 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக ரயில்வே திட்டமிடல் பணிப்பாளர் விஜய சமரசிங்க அறிவித்துள்ளார்.

 கொழும்புக்கும் காங்கேசன்துறைக்கும் இடையிலான ரயில் சேவைகளை முன்னெடுக்கும் திட்டத்தின் கீழ்- ரயில் பாதை நிர்மாணப் பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

 இந்நிலையில் வடபகுதிக்கான ரயில் சேவைகள் ஓமந்தை வரை இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


கிளிநொச்சிக்கான இரண்டாம் கட்ட பரீட்சார்த்த ரயில் சேவை Reviewed by Admin on August 31, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.