அண்மைய செய்திகள்

recent
-

31 கைதிகளை மாற்ற இணக்கம்: இந்தியா

இலங்கை சிறைச்சாலைகளிலுள்ள 31 இந்தியர்களை நாட்டுக்கு அனுப்புவதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளதாக கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

 இலங்கை மற்றும் இந்தியா ஆகிய நாடுகளுக்கு இடையில் கடந்த 2012 ஜுன் மாதம் மேற்கொள்ளப்பட்ட கைதிகள் மாற்றிக்கொள்ளும் ஒப்பந்தத்திற்கு அமையவே இந்த கைதிகள் பரிமாற்றம் இடம்பெறுகின்றன.

 இதற்கான ஏற்பாடுகள் பூர்த்தியானதும் இரண்டு தொகுதிகளாக கைதிகள் இந்திய சிறைச்சாலைகளுக்கு மாற்றப்படவுள்ளனர்.

 இதேவேளை, கைதிகள் பரிமாற்றல் திட்டத்தின் கீழ் கடந்த பெப்ரவரி மாதத்தில் சுமார் 20 கைதிகளும் கடந்த வாரம் ஒன்பது கைதிகளும் இந்திய சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இவர்கள் கேரளா மாற்றும் தமிழ் நாடு ஆகிய மாநிலங்களை சேர்ந்தவர்களாவர்.


31 கைதிகளை மாற்ற இணக்கம்: இந்தியா Reviewed by Admin on August 19, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.