அண்மைய செய்திகள்

recent
-

கிராண்ட்பாஸ் பள்ளிவாசல் விவகாரம்: பொலிஸ்மா அதிபருக்கு ரிசாத் பதியூதின் கடிதம்

கிராண்ட்பாஸ் பள்ளிவாசல் தாக்கப்பட்டபோது பொலிஸார் தமது கடமையினைச் செய்யத் தவறி விட்டதாக, பொலிஸ் மா அதிபர் என். இலங்ககோனிற்கு அமைச்சர் ரிசாத் பதியூதின் கடிதம் எழுதியுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் ரிசாத் தனது கடித்தத்தில் குறிப்பிட்டுள்ளார்.

கடிதத்துடன், பள்ளிவாசல் தாக்கப்பட்டபோது சீ.சீ.ரி.வி கெமராவில் பதிவு செய்யப்பட்ட காட்சிகள் அடங்கிய இறுவெட்டு ஒன்றையும் அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அவர் தனது கடிதத்தில், பள்ளிவாசல் தாக்கப்பட்டமைக்கு சாட்சியாக அப்பகுதியில் வாழும் பல மக்கள் உள்ளனர்.

முஸ்லிம் மக்களும் அவர்களது பள்ளிவாசல்களும் தாக்கப்படுவது இது முதல் தடவையல்ல. அனைத்து வன்முறைச் சம்பவங்களிலும் பொலிஸார் தங்களது கடமைகளை ஒழுங்காக நிறைவேற்றவில்லை.

 கடமையை நிறைவேற்றாத பொலிஸாருக்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுக்கவும் எனக் குறிப்பிட்டுள்ளார்.



கிராண்ட்பாஸ் பள்ளிவாசல் விவகாரம்: பொலிஸ்மா அதிபருக்கு ரிசாத் பதியூதின் கடிதம் Reviewed by Admin on August 17, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.