அண்மைய செய்திகள்

recent
-

வெளிநாட்டு உதவியுடன் 2015ற்கு முன்னர் மன்னார் உட்பட வடக்கில் ஒன்பது மீன்பிடித் துறைகள்

2015ம் ஆண்டிற்கு முன்னர் இலங்கையில் வெளிநாட்டு உதவியுடன் 11 மீன்பிடித் துறைமுகங்கள் அமைக்கப்படவுள்ளதாக கடற்றொழில் நீரியல் வளத்துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். யாழ்.சேந்தாங்குளத்தில் நடைபெற்ற நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

 குருநகர் மற்றும் மன்னாரில் பிரான்ஸ் நாட்டின் நிபுணர்கள் குழுவினர் ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர். பருத்தித்துறையில் ஜப்பான் நாட்டின் உதவியுடன் துறைமுகம் அமைக்கப்படவுள்ளது.

 நாட்டில் மொத்தமாக 11 மீன்பிடித் துறைமுகங்களை அமைக்க கடற்றொழில் அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இவற்றில் ஒன்பது மீன்பிடித் துறைமுகங்கள் வடக்கிலேயே அமைக்கப்படவுள்ளன.


 இந்த மீன்பிடித் துறைமுகங்கள் மூலம் கடற்றொழில் துறையில் போருக்கு முன்னரான மொத்த தேசிய உற்பத்தியை மீண்டும் வடக்கில் இருந்து பெற்றுக் கொள்ள முடியும் என்றார்.

வெளிநாட்டு உதவியுடன் 2015ற்கு முன்னர் மன்னார் உட்பட வடக்கில் ஒன்பது மீன்பிடித் துறைகள் Reviewed by Admin on August 11, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.