அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் வேலைத்திட்டம் தொடர்பாக விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் மாநாடு.

மன்னார் மாவட்ட தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் இவ்வருடத்திற்கான வேலைத்திட்டங்கள் தொடர்பாக ஊடகவியாலாளர்களுக்கு விளக்கமளிக்கும் மாவட்ட ஊடகவியலாளர் மாநாடு ஒன்று நேற்று வியாழக்கிழமை மாலை மன்னார் மாவட்ட தேசிய இளைஞர் வேவைகள் மன்றத்தில்,தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் வடமாகாண பணிப்பாளர் என்.எம்.முனவ்பர் தலைமையில் இடம் பெற்றது.

இதன் போது தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் கடந்த வருட வேலைத்திட்டங்கள் தொடர்பாகவும்,இவ்வருடம் இடம் பெற்று வரும் வேலைத்திட்டங்கள் தொடர்பாகவும் விளக்கமளிக்கப்பட்டது.

குறிப்பாக இளைஞர்களையும்,இளைஞர் கழகங்களையும் மையப்படுத்தி இடம் பெற்று வரும் வேலைத்திட்டம்,இளைஞர் கழகங்களின் அபிவிருத்தி உட்பட பல விடயங்கள் ஆராயப்பட்டது.

அதுமட்டுமின்றி தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் மன்னார் மாவட்டத்தில் நடாத்தப்படுகின்ற இலவச தொழில் பயிற்சி நெறிகள் தொடர்பாகவும் விளக்கமளிக்கப்பட்டது.

குறித்த  ஊடகவியலாளர் மாநாட்டில் மன்னார் மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி எஸ்.ரவிக்குமார்,தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் கணக்குப்பதிவாளர் ஐ.சி.ஏ.ஜோன் பொஸ்கோ,இளைஞர் சேவை அதிகாரி ரி.பூலோகராஜா,மன்னார் நகர இளைஞர் சேவை அதிகாரி ஏ.டியுக்குரூஸ்,நானாட்டன் உதவி இளைஞர் சேவை அதிகாரி எம்.சைமன் சில்வா உற்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.







மன்னார் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் வேலைத்திட்டம் தொடர்பாக விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் மாநாடு. Reviewed by Admin on August 30, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.