இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு.
இருவேறு சந்தர்ப்பங்களில் கைது செய்யப்பட்டிருந்த இந்த 41 மீனவர்களும் நேற்று வியாழக்கிழமை மன்னார் மாவட்ட நீதவான் ஆனந்தி கனகரட்ணம் முன்னிலையில் ஆஜர்செய்யப்பட்டனர்.
இதன்போது இந்த மீனவர்களை எதிர்வரும் 6ஆம் திகதி(06-09-2013) வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் நீதவான் ஆனந்தி கனகரட்ணம் உத்தரவிட்டhர். கடந்த 22ஆம் திகதி குறித்த 41 இந்திய மீனவர்களும் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது அவர்களுக்கு எதிராக தலைமன்னார் பொலிஸாரால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த நிலையிலலே ஆவர்கள் மீண்டும் நேற்று மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது விளக்கமறியல் உத்தரவு பிரப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு.
Reviewed by Admin
on
August 30, 2013
Rating:
No comments:
Post a Comment