மன்னாரில் இடம் பெற்ற தமிழ் தேசியக்கூட்டமைப்பின் முதலாவது தேர்தல் பிரச்சார கூட்டம்-பெருந்திரளான மக்கள் பங்கேற்பு-(படங்கள் )
வடமாகாண சபைக்காண தமிழ் தேசிய கூட்டமைப்பின் மன்னார் மாவட்ட வேற்பாளர்களை ஆதரித்து நேற்று செவ்வாய்க்கிழமை மாலை மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் மாலை 5 மணியளவில் முதலாவது தேர்தல் பிரச்சார கூட்டம் தமிழ் தேசயக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோ நோகராதலிங்கம் தலைமையில் இடம் பெற்றது.
இதன் போது பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும்,தமிழ் தேசியக்கூட்டமைப்பின் மன்னார் மாவட்ட வேட்பாளர்களுக்கும் மன்னார் மக்கள் ஆமோக ஆதரவை வழங்கி வரவேற்றனர்.
ஆரம்ப நிகழ்வாக ,மன்னார் மாவட்டத்தில் தேர்தலில் போட்டியிடும் 8 வேற்பாளர்களான வைத்திய கலாநிதி என்.குணசீலன், சட்டத்தரணி டெணிஸ்வரன், சட்டத்தரணி பிறிமுஸ் சிராய்வா, அயுப் அஸ்மி, சாள்ஸ் நிர்மலநாதன், விமலசேகரம், சிவகரன், யூட் ஆகியோர் அறிமுக உரையாற்றினர்.
இதனைத் தொடர்ந்து முன்னாள் நீதியரசர் விக்னேஸ்வரன், பாராளுமன்ற உறுப்பினர்கலான மாவை சேனாதிராசா, செல்வம் அடைக்களநாதன், சுரேஸ் பிரேமச்சந்திரன், அரியேந்திரன்,சிவசக்தி ஆனந்தன் ,எம்.ஏ.சுமந்திரன்,யோகேஸ்வரன் , முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கலான த.சித்தாத்தன், சிறிகாந்தா, நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த பிர்தவ்ஸ் நலிம், ஆகியோர் உரையாற்றினர்.
இதன் போது ஆயிரக்கணக்காண ஆதரவாளர்கள் கலந்து கொண்டு ஆதரவினை தெரிவித்தனர்.
(மன்னார் நிருபர்)
மன்னாரில் இடம் பெற்ற தமிழ் தேசியக்கூட்டமைப்பின் முதலாவது தேர்தல் பிரச்சார கூட்டம்-பெருந்திரளான மக்கள் பங்கேற்பு-(படங்கள் )
Reviewed by Admin
on
August 28, 2013
Rating:
No comments:
Post a Comment