அண்மைய செய்திகள்

recent
-

திருமலை மாணவர்கள் கொலை! கைதான படைவீரர்களின் விளக்கமறியல் காலம் நீடிப்பு

2006 ம் ஆண்டு திருகோணமலையில் 5 மாணவர்கள் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 12 அதிரடிப்படை வீரர்களின் விளக்கமறியல் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.
திருகோணமலை நீதிவான் ஏ.எல். அஸ்ரா இதற்கான உத்தரவை பிறப்பித்தார்.

இந்தநிலையில் ஒரு சந்தேகநபர் மேன்முறையீடு செய்வதற்காக சிறைச்சாலை ஆணையாளரின் ஆலோசனையை பெறுவதற்கான அனுமதியை நீதிவான் வழங்கினார்.

2006 ஆம் ஆண்டு ஜனவரி 2ம் திகதியன்று திருகோணமலை கடற்கரையில் விளையாடிக் கொண்டிருந்த 5 மாணவர்களையும் கொலை செய்த குற்றச்சாட்டே 12 படைவீரர்கள் மீதும் சுமத்தப்பட்டுள்ளது.

கொல்லப்பட்ட மாணவர்களில் ஒருவரின் தந்தையான டாக்டர் காசிப்பிள்ளை மனோகரன் தமது மகன் உட்பட்டவர்களின் கொலைகளுக்கு நீதி பெற்றுத் தரப்பட வேண்டும் என்று கோரி ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையிலும் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
திருமலை மாணவர்கள் கொலை! கைதான படைவீரர்களின் விளக்கமறியல் காலம் நீடிப்பு Reviewed by NEWMANNAR on August 14, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.