அண்மைய செய்திகள்

recent
-

பாடசாலை மாணவியைக் காணவில்லை

ஏழாலை மேற்கு கோட்டைக்காட்டை சேர்ந்த மாணவியொருவர் பாடசாலை சென்று நான்கு நாட்கள் ஆகியும் வீடு திரும்பவில்லையென பெற்றோரினால் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

 சுன்னாகம் மயிலணி மகா வித்தியாலயத்தில் க.பொ.த.சாதரண வகுப்பில் கல்வி கற்கும் நகுலேஸ்வரன் நளிர்வனா என்ற மாணவியே இவ்வாறு காணமல்போயுள்ளவர் ஆவார். 

சம்பவம் பற்றி தெரியவருவதாவது குறிப்பிட்ட மாணவி கடந்த செவ்வாயக்கிழமை பாடசாலையில் நடைபெறும் மேலிதிக வகுப்பிற்கு கலந்து கொள்ளச் சென்றதாகவும் அதன் பின்னர் வீடு திரும்வில்லை எனத் தெரிவித்துள்ளனர் மேலும் இம் மாணவியை தந்தையார் குறிப்பிட்ட நாளில் பாடசாலை அழைத்து சென்று வகுப்பிற்கு செல்ல விட்டு விட்டே வந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பான புலன் விசாரணைகளை சுன்னாகம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.


பாடசாலை மாணவியைக் காணவில்லை Reviewed by Admin on September 01, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.