இரத்த வங்கியில் குருதிக்கு தட்டுப்பாடு
நாளாந்தம் சுமார் 500 பொய்ன்ட் குருதி கையிருப்பில் பேணப்பட்டு வந்த நிலையில் தற்போது 300 பொய்ன்ட் குருதியே இருப்பில் உள்ளதாக யாழ் போதனா வைத்தியசாலை இரத்த வங்கியின் பொறுப்பதிகாரி டொக்டர் தாரணி குருபரன் தெரிவிக்கின்றார்.
குருதிக் கொடையாளர்களிடம் இருந்து இரத்தம் எதிர்பார்க்கப்படுவதாகவும் யாழ் இரத்த வங்கியின் பொறுப்பதிகாரி குறிப்பிட்டார்.
தமது பிரிவிற்கு நேரடியாக வருகை தருவதன் மூலம் அல்லது நல்லூர் திருவிழா வளாகத்தில் நடைபெறுகின்ற நடமாடும் சேவையின் ஊடாக குருதிக் கொடையாளர்கள் குருதியை வழங்க முடியும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இரத்த வங்கியில் குருதிக்கு தட்டுப்பாடு
Reviewed by Admin
on
September 01, 2013
Rating:

No comments:
Post a Comment