அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் உட்பட பல இடங்களில் போலி நாணயத்தாள்கள் புழக்கம் அவதானத்துடன் இருக்குமாறு போலீசார் கோரிக்கை

இலங்கையில் பல இடங்களில் போலி நாணயத்தாள்கள் புழக்கத்தில் இருப்பதால், பணத்தை பரிமாற்றம் செய்தல் மற்றும் பயன்படுத்தும் போது கவனமாக இருக்குமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்

போலி நாணயத்தாள்கள் கணனியில் அச்சிடப்படுவதால், அதனைத் தடவி பார்க்கும் போதும், கசக்கும் போதும் அந்த நாணயத்தாள் போலியானதா அல்லது அசலானதா என்பதை அறிந்து கொள்ள முடியும் என பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

 இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளிலும் தென் பகுதிகளிலும் போலி நாணயத்தாள்கள் புழக்கத்தில் உள்ளன. கடந்த 29 ஆம் திகதி கல்முனை பிரதேசத்தில் 14, ஆயிரம் ரூபா நாணயத்தாள்களுடன் மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். மன்னார், வவுனியா மற்றும் களுத்துறை பிரதேசங்களிலும் இவ்வாறு நாணயத்தாள்கள் கைப்பற்றப்பட்டன.

 இதனைத்தவிர, நல்லூர் கந்தசுவாமி ஆலயம், மடு தேவாலயம், முன்னேஸ்வரம் ஆலயம் மற்றும் சிலாபம் தலவில தேவாலயம் ஆகியவற்றின் வருடாந்த உற்சவங்களின் போது போலி நாணயத்தாள்கள் புழக்கத்தில் விடப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.


மன்னார் உட்பட பல இடங்களில் போலி நாணயத்தாள்கள் புழக்கம் அவதானத்துடன் இருக்குமாறு போலீசார் கோரிக்கை Reviewed by Admin on September 01, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.