அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் நானாட்டானில் தாய்,சேய் நலன்புரி நிலையம் திறந்து வைப்பு.

மன்னார் நானாட்டான் பிரதேசச் செயலகத்தில் 'வேல்ட் விசன்' அமைப்பின் நிதி உதவியுடன் அமைக்கப்பட்ட தாய்,சேய் நலன்புரி நிலையம் இன்று புதன் கிழமை காலை வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டுள்ளதாக நானாட்டான் பிரதேசச் செயலாளர் சி.ஏ.சந்திரையா தெரிவித்தார் 


குறித்த நிலையத்தினை நானாட்டான் வைத்திய அதிகாரி எஸ்.சிவபாலன்,நானாட்டான் பிரதேச சபை தலைவர் அன்புராஜ் லெம்பேட்,வேல் விசன் அமைப்பின் முகாமையாளர் செல்வபதி ஆகியோர் கலந்து கொண்டனர். 

குழந்;தைகளுக்கு பாலுட்டும் தாய்மார்களின் நலன் கருதியே குறித்த தாய்,சேய் நலன்புரி நிலையம் அமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டதாக நானாட்டான் பிரதேசச் செயலாளர் மேலும் தெரிவித்தார்.
மன்னார் நானாட்டானில் தாய்,சேய் நலன்புரி நிலையம் திறந்து வைப்பு. Reviewed by Admin on September 25, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.