மன்னார் நீதிமன்றத்தினால் இராமேஸ்வர மீனவர்கள் 41 பேர் விடுதலை.
கடந்த யூன் மாதம் 7 ஆம் திகதி கைது செய்யப்பட்ட 21 மீனவர்களும்,ஆகஸ்ட் மாதம் 6 ஆம் திகதி கைது செய்யப்பட்ட 20 மீனவர்களுமே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்டதாகக்கூறி குறித்த 41 மீனவர்களும் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு தலைமன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டு மன்னார் நீதிமன்றத்தின் உத்தரவிற்கமைவாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.
இந்த நிலையில் குறித்த 41 மீனவர்களும் இன்று புதன் கிழமை காலை மீண்டும் மன்னார் நீதவான் ஆனந்தி கணகரட்னம் முன்னிலையில் ஆஜர் படுத்தப்பட்டனர். இதன் போது குறித்த மீனவர்கள் சார்பாக சட்டத்தரணிகளான இ.கயஸ் பல்டானோ மற்றும் ரி.வினோதன் ஆகியோர் ஆஜராகியிருந்தனர். இதன் போது விசாரனைகளை மேற்கொண்ட நீதவான் ஆனந்தி கனகரட்ணம் குறித்த மீனவர்களை விடுதலை செய்தார்.
குறித்த மீனவர்கள் தற்போது தலைமன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். தலைமன்னார் பொலிஸார் இவர்களை கடற்படையினரினுடாக இராமேஸ்வரத்திற்கு அழைத்துச் செல்வதற்காண நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதே வேளை இலங்கை கடல் எல்லைக்குள் வைத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை 22 ஆம் திகதி கைது செய்யப்பட்டு மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட 20 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் மாதம் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தை குறிப்பிடத்தக்கது.
மன்னார் நீதிமன்றத்தினால் இராமேஸ்வர மீனவர்கள் 41 பேர் விடுதலை.
Reviewed by Admin
on
September 25, 2013
Rating:

No comments:
Post a Comment