அண்மைய செய்திகள்

recent
-

கிளிநொச்சியில் பெண்களுக்கு மறைமுக கருத்தடை

 வடக்கின் சில கிராமங்களில் மறைமுக கருத்தடை மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஆங்கில ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. கிளிநொச்சியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதம் 31ஆம் திகதி இவ்வாறு குறித்த பெண்களுக்கு கருத்தடை செய்யப்பட்டுள்ளது.

வாழைப்பாடு, வீரவில் மற்றும் கீரனச்சி ஆகிய கரையோர கிராமங்களைச் சேர்ந்த பெண்களுக்கு இவ்வாறு மறைமுகமாக கருத்தடை செய்யப்பட்டுள்ளது.

ஐந்து வயதுக்கும் கீழ் குழந்தைகள் உடைய பெண்கள் வைத்தியசாலைக்கு சமூகமளிக்க வேண்டுமென கோரப்பட்டதாகவும், இதன்படி வைத்தியசாலைக்கு சென்றவர்களுக்கு கருத்தடை ஊசி ஏற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

நீண்ட காலத்திற்கு இந்த முறைமையின் மூலம் பெண்கள் கருத்தரிக்க மாட்டார்கள் என தாதியர் தெளிவுபடுத்தியுள்ளனர்.

ஆரம்பத்தில் இதனை ஏற்றுக்கொள்ள மறுத்த தாய்மார் பின்னர் ஏற்றுக் கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அம்பூலன்ஸ் மூலம் குறித்த பெண்கள் அழைத்துச் செல்லப்பட்டு கருத்தடை செய்யப்பட்டுள்ளனர்.

தமிழ் மக்களின் எண்ணிக்கையினை அவர்களின் பிரதிநிதித்துவத்தை குறைக்கும் முயற்சியாகவே இதனை நோக்க வேண்டியுள்ளதாக தமிழ் புத்திஜீவிகள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

கிளிநொச்சியில் பெண்களுக்கு மறைமுக கருத்தடை Reviewed by Admin on September 14, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.