அண்மைய செய்திகள்

recent
-

உரிமைகள் என்றும் உன்னதமானவை. சலுகைகள் சவப்பெட்டிக்கு சமனானவை - இ .சார்ள்ஸ்

எம் துயரங்கள் இன்னும் தூர்ந்து விடவில்லை
தாங்கும் சுமைகள் குறைந்து விடவில்லை
நெஞ்சம் நிறைந்த வலிகள் இன்னும்  அகலவில்லை
விழிகள் மூடி நாம் இன்னும் ஏன் அழுகின்றோம்
விழித்தெழு மகனே ! வீடு உனை வாவென அழைக்கின்றது
உறங்கும் உன் வலி தீர வீடு உனை வாவென அழைக்கின்றது'

எம் தலைவிதியை தீர்மானிக்கக்கூடிய வரலாற்றுத்தருணமொன்றில் தமிழினம் இன்று நின்று  கொண்டிருக்கின்றது.ஈழத்தமிழ்மக்களின் அரசியல், சமூக, பொருளாதார, பண்பாட்டு உரிமைகளையும் ,அபிலாசைகளையும்,ஏனைய வாழ்வு இருப்பியல் அம்சங்களையும் பெற்றெடுக்கும் பொருட்டு வீரம் செறிந்த எம்மக்களால் முன்னெடுக்கப்பட்ட 30 வருட ஆயுத விடுதலைப் போராட்டம் பெருந்துயரோடு முடக்கப்பட்ட நிலையில், 4 வருடங்கள் எமக்கு எதுவுமற்ற நிலையில் எம்மைத்தாண்டிச் சென்று விட்டன.

தமிழ் மக்களாகிய எம் துயரம் இன்னும்  முற்றுப் பெறவில்லை.ஆயுதப்போராட்டம் நடைபெற்ற 30 வருடகாலப் பகுதியை விட, எம் மக்களும் மக்களைத்தாங்கி நிற்கும் தாய் மண்ணும் பல்வேறு இழப்புக்களையும்இ பெருவலியையும் கடந்த 4 வருடங்களாக பேரளவில் அனுபவித்துக்கொண்டிக்கின்றனர்.

பாரம்பரியமாக வாழ்ந்து வரும் எம்மண் பலவந்தமாக மேற்கொள்ளப்படும் சிங்களக்குடியேற்றங்களாலும் , மீள்குடியேற்றங்களாலும் எம் கரங்களைவிட்டு எம்கண்முன்னே பறிக்கப்படுகின்றன.
எம் மக்களின் ஐPவாதாரமாக விளங்கும் மீன்பிடி. விவசாயம்,என்பவை எம்மிடமிருந்து பறிக்கப்படுகின்றன . இதனால் மோசமான வறுமை நிலைக்கு மேலும் எம் மக்கள் தள்ளப்படுகின்றனர்.
எமது பிரதேசத்தின் காட்டு வளங்கள் மண் வளம் என்பன கண்மூடித்தனமாக சூறையாடப்படுகின்றன.

மீள்குடியேற்றம், புனர்வாழ்வு நடவடிக்கைகளில் போரினாலும்,இடப்பெயர்வினாலும் பாதிக்கப்ட்டு கையறுநிலையில் வாழும் தமிழ் மக்களிற்கு எவ்வித புனர் வாழ்வும் இதுவரை கிட்டவில்லை.

போதிய கல்வித்தகுதியிருந்தும் தமிழ் இளைஞர்கள் யுவதிகட்கு அரச வேலைவாய்ப்புக்களில் நீதியான வாய்ப்புக்கள் தொடர்ந்தும் மறுக்கப்பட்டு அவர்களின் எதிர்கால வாழ்க்கை திட்டமிட்டு பாழடிக்கப்படுகன்றன.

தமிழ் மக்களின் பண்பாட்டுக்கலாச்சார அடையாளங்கள் அழிக்கப்படுவதோடு சமூக சீர்கேடுகளுக்கான நடவடிக்கைகள் திட்டமிடப்பட்ட வகையில் மேற்கொள்ளப்படுகின்றன.

மன்னார் வாழ் சமூகங்களுக்கிடையிலான நல்லிணக்கம், புரிந்துணர்வு ஆகியவற்றுக்கு வேட்டு வைக்கும் முகமாக நடவடிக்கைகள் கையாளப்படுகின்றன. 

அரசநடைமுறைகளின் பிரகாரம் மன்னார் பிரதேசத்திற்கு கிடைக்க வேண்டிய குறைந்த பட்ச நிதி ஒதுக்கீடுகள் கூட மேலும் குறைக்கப்பட்டும் வழங்கப்படாமலும் எமது பிரதேசத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகள் முடக்கப்படுகின்றன.மன்னார் மாவட்டத்தைப் பின் தங்கிய மாவட்டமாகவும், தங்கியிருக்கும் மாவட்டமாகவும் தொடர்ந்தும் பேணும் வகையில் அபிவிருத்தி நிதி ஒதுக்க்Pடுகளில் பாரபட்சம் காட்டப்படுகின்றன.

மன்னார் மாவட்ட மக்களின் சமூக பொருளாதார மேம்பாடுகளில் நீதிக்குப்புறம்பான செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுவதோடு பெறுமதியான மனித வளங்கள் தொடர்ந்தும் வீணடிக்கப்படுகின்றன.

இத்தகைய யதார்த்தமான நிலைமைகளினால் எங்கள் பிரதேசம் மிகவும் மோசமாக பாதிக்கப்படுகின்றது. மோசமான முறையில் எமது மக்கள் வஞ்சிக்கப்படுகின்றனர்.எம்மக்களும,; எம் பிரதேசமும் இனியும் எதனையும் இழக்கக்கூடாது.இந்த மண்ணில் இழத்தல் என்பது மட்டும் இழப்பாக இருக்கட்டும்.அதற்கான ஒரு முக்கிய சந்தர்ப்பத்தில் தமிழ் மக்களாகிய நாம் வந்திருக்கின்றோம். 

உரிமைகள் என்றும் உன்னதமானவை. சலுகைகள் சவப்பெட்டிக்கு சமனானவை. எனவே உன்னதமான உரிமைகளையும் அத்தகு உரிமைகளோடு ஒன்றெனக்கலந்திருக்கம் சுபீட்சமான வாழ்வையும் எம்மக்கள் பெற்றுக் கொள்ளும் முகமாக தமிழ் மக்கள் எதிர் கொள்ளவிருக்கும் வடமாகாணசபைத்தேர்தலில்  எமது உரிமைகளுக்கும் அபிலாசைகளுக்கும் எதிரானவர்களை அறவே நிராகரித்து தமிழ்த்தேசியத்தை தமது தோள்களில் சுமந்திருக்கும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பை எவ்வித நிபந்தனைகளுமின்றி ஆதரவளித்து மிகப்பெரு வெற்றியை ஈட்டவைக்க வேண்டிய வரலாற்றுக் கடப்பாட்டையும், பொறுப்பையும் எம் தமிழ் மக்களாகிய நீங்கள் கொண்டிருக்கிறீர்கள். தமிழினத்தின் விடுதலையை வேரறுக்க வந்தவர்களின் அற்ப சலுகைகளுக்கும், கயமைத்தனத்திற்கும் விலைபோகாது தமித்தேசிய கூட்டமைப்பின் தேர்தல் சின்னமாகிய வீட்டிற்கும் நீங்கள் விரும்பினால் எனது இலக்கம் 3 ற்கும் தங்களின் பெறுமதியான வாக்குகளை இடுமாறு  இனஉணர்வு படைத்த ஒவ்வொரு தமிழ் மகனையும், தமிழ் மகளையும் உரிமையோடும் மிகுந்த வினயத்துடனும் வேண்டிக்கொள்கின்றேன்.
'வெல்க தமிழ்த் தேசியம்'
  

உரிமைகள் என்றும் உன்னதமானவை. சலுகைகள் சவப்பெட்டிக்கு சமனானவை - இ .சார்ள்ஸ் Reviewed by Admin on September 01, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.