அண்மைய செய்திகள்

recent
-

கைதிகளை அவர்களின் சொந்த வசிப்பிடம் உள்ள பிரதேசங்களுக்குஅருகில் இருக்கும் சிறைச்சாலைகளுக்கு மாற்ற திட்டம்

நாடு முழுவதும் உள்ள சிறைச்சாலைகளில் தண்டனை அனுபவித்து வரும் சிறை கைதிகளை அவர்களின் சொந்த வசிப்பிடம் உள்ள பிரதேசங்களுக்கு அருகில் இருக்கும் சிறைச்சாலைகளுக்கு மாற்றும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

 மரண தண்டனை கைதிகள், ஆயுள் கைதிகள் மற்றும் பாதாள உலக குற்றவாளிகளை தவிர்ந்த ஏனைய கைதிகளுக்கு இந்த சந்தர்ப்பம் வழங்கப்படும் என புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் சந்திரசிறி கஜதீர தெரிவித்தார். சிறைச்சாலைகளில் காணப்படும் இடநெருக்கடி பிரச்சினைக்கு தீர்வு காணவும் கைதிகளின் குடும்ப உறவினர்கள் அடிக்கடி சந்திப்பதற்கு வசதியை ஏற்படுத்தி கொடுக்கும் நோக்கிலும் இந்த திட்டம் செயற்படுத்தப்படுகிறது.

 சிறை கைதிகளை உளவியல் ரீதியாக மேம்படுத்தவும் கைதிகளுக்கு புனர்வாழ்வளிக்கும் திட்டத்தை அர்த்தமுள்ளதாக்கவும் ஒரு பரீட்சார்த்த வேலைத்திட்டமாக இந்த திட்டம் முன்னெடுக்கப்படுகிறது என்றும் அமைச்சர் கூறினார்.

கைதிகளை அவர்களின் சொந்த வசிப்பிடம் உள்ள பிரதேசங்களுக்குஅருகில் இருக்கும் சிறைச்சாலைகளுக்கு மாற்ற திட்டம் Reviewed by Admin on September 01, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.