வெளிநாட்டிலிருந்து முஸ்லிம் அடிப்படைவாதத்தை கட்டியெழுப்ப முயற்சி –கோத்தா குற்றச்சாட்டு!!
வெளிநாடுகளில் வசிக்கும் சில முஸ்லிம் அடிப்படைவாதிகள் இலங்கையினுள், முஸ்லிம் அடிப்படைவாதத்தை கட்டியெழுப்ப முயற்சித்ததாக பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய தெரிவித்துள்ளார்.
யுத்ததின் பின்னர் இலங்கையின் சவால் மற்றும் பிராந்திய நிலைப்பாடு என்ற தொனிப்பொருளில் கொழும்பில் இடம் பெற்ற நிகழ்வில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.தமிழீழ
விடுதலைப்புலிகளுக்கு ஆதரவான புலம்பெயர்ந்த தமிழர்கள் சர்வதேச அமைப்புக்கள் தமது பக்கம் ஈர்த்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மனித உரிமைகள் ஆணையாளரின் இலங்கை விஜயம் அதன் பிரதிபலன் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனிடையே, இலங்கை மற்றும் சீனாவுக்கிடையே காணப்படும் உறவு குறித்து சில நாடுகள் தவறாக புரிந்துக் கொண்டுள்ளதாகவும் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டிலிருந்து முஸ்லிம் அடிப்படைவாதத்தை கட்டியெழுப்ப முயற்சி –கோத்தா குற்றச்சாட்டு!!
Reviewed by Admin
on
September 04, 2013
Rating:
.jpg)
No comments:
Post a Comment