மட்டு மாணவனின் சடலம் வீட்டிலிருந்து மீட்பு
மட்டக்களப்பு மத்திய கல்லூரியில் தரம் 10ல் கல்வி பயிலும் மாணவன் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் உடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த மாணவனின் வீட்டிலேயே தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
மட்டக்களப்பு மத்திய கல்லூரியின் பின்புற பகுதியில் வசிக்கும் சு.ரவிவர்மன் (14வயது) என்ற மாணவனே இவ்வாறு தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்சடலம் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இது தொடர்பிலான விசாரணையை மட்டக்களப்பு காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
மட்டு மாணவனின் சடலம் வீட்டிலிருந்து மீட்பு
Reviewed by Admin
on
September 14, 2013
Rating:
.jpg)
No comments:
Post a Comment