தலைமன்னார் கடலில் காணாமல் போன மீனவர் நயினாதீவு கடற்கரையில் சடலமாக மீட்பு-சந்தேகத்தின் பேரில் இருவர் கைது.
தலைமன்னார் கடற்பரப்பில் தொழிலுக்குச் சென்று காணாமல் போன மீனவர் சடலமாக மீட்டுள்ளதாகவும் சந்தேகத்தின் பேரில் இருவர் கைது செய்யப்பட்டு தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தலைமன்னார் பொலிஸ் நிலையத்தின் தலைமையக பொறுப்பதிகாரி ஏ.எல்.எம்.ஜெமில் தெரிவித்தார்.
-தலைமன்னார் கிராமத்தைச் சேர்ந்த ஜே.ஜெரிசா மடுத்தின் மற்றும் அதே கிராமத்தைச் சேர்ந்த 2 பிள்ளைகளின் தந்தையான ஸ்டார்லின் ஜெராட் (வயது-39) ஆகிய இரண்டு மீனவர்களும் கடந்த மாதம் 22 ஆம் திகதி வியாழக்கிழமை மீன் பிடிப்பதற்காக படகொன்றில் ஆழ் கடலுக்குச் சென்றுள்ளனர்.
இந்த நிலையில் மறு நாள் 23 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை இவர்கள் சென்ற படகு மாத்திரம் கரையொதுங்கியது.
இந்த நிலையில் குறித்த படகில் சென்றவர்களில் ஜே.ஜெரிசா மடுத்தின் என்பவர் இராமேஸ்வரம் கடற்பரப்பிற்குற்பட்ட 5 ஆம் மண் திட்டியில் நடுக்கடலில்; கிடந்த நிலையில் மீனவர்களினால் மீட்கப்பட்டு பேசாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
எனினும் கூடச்சென்ற மீனவரான ஸ்டார்லின் ஜெராட் என்பவரது நிலை தெரியவில்லை.இந்த நிலையில் இவரது மனைவி தலைமன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தனர்.

இதன் போது மேலும் ஒருவர் விசாரனைகளுக்கு உற்படுத்தப்பட்டு வந்தார்.
-அதே நேரம் சம்பவத்தில் காணாமன் போன மீனவரான ஸ்டார்லின் ஜெராட் என்பவரது சடலம் நயினாதீவு கடற்கரைப்பகுதியில் கரையொதுங்கியது.
சடலம் மீட்கப்பட்டு அடையாளம் காண்பதற்காக யாழ் வைத்தியசாலையின் பிரேத அரையில் வைக்கப்பட்டிருந்தது.சடலம் உறவினர்களினால் அடையாளம் காணப்பட்டதன் பின் நேற்று முந்தினம் சனிக்கிழமை தலைமன்னாருக்கு கொண்டு வரப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.
-கைது செய்யப்பட்ட இருவருடைய வாக்குமூலம் தொடர்ந்தும்; முரனானதாக காணப்பட்ட நிலையில் தலைமன்னார் பொலிஸார் குறித்த இருவரையும் சனிக்கிழமை மன்னார் நீதவான் முன்னிலையில் ஆஜர் படுத்தினர்.
இதன் போது குறித்த இருவரையும் எதிர்வரும் 5 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
-குறித்த சடலத்தின் உடற் கூற்று பரிசோதனை அறிக்கையை தாம் பார்த்துக்கொண்டிருப்பதாகவும்,அதன் பின்பே அவர் கொலை செய்யப்பட்டாரா அல்லது படகு கவிழ்ந்து உயிரிழந்தார என்ற விடையம் தெரிய வரும் என தலைமன்னார் பொலிஸ் நிலையத்தின் தலைமையக பொறுப்பதிகாரி ஏ.எல்.எம்.ஜெமில் மேலும் தெரிவித்தார்.
-மன்னார் நிருபர்-
(02-09--2013)
தலைமன்னார் கடலில் காணாமல் போன மீனவர் நயினாதீவு கடற்கரையில் சடலமாக மீட்பு-சந்தேகத்தின் பேரில் இருவர் கைது.
Reviewed by NEWMANNAR
on
September 02, 2013
Rating:

No comments:
Post a Comment