அண்மைய செய்திகள்

recent
-

பெங்களூரில் கடனட்டை மோசடியில் ஈடுபட்ட இரு தமிழர் கைது!

போலி கடனட்டை தயாரித்து மோசடியில் ஈடுபட்டு வந்த இலங்கையர் இருவர் இந்தியாவன் பெங்களூரில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

மஹேந்திர கருணாராஜ் மற்றும் அஸ்வின் குமார் ஆகிய இருவரரே கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் இவர்கள் பெங்களூர் மற்றும் மதுரையை வசிப்பிடமாகக் கொண்டவர்கள் எனவும் இந்திய காவல்துறை அறிவித்துள்ளது.

சந்தேகநபர்களிடமிருந்து 50 கடனட்டைகள் 2 மடிகணனிகள் பென்டிரைவ் மற்றும் தயாரிப்புக்கென உபயோகப்படுத்தப்பட்ட கருவிகளும் காவல்துறையால் கைப்பற்றப்பட்டுள்ளன.

பிரான்சிலுள்ள நண்பர் ஒருவருக்கு கட்டணமொன்றை செலுத்தி மின்னஞ்சல் மூலமாக கடனட்டை தரவுகளை கருணாராஜ் பெற்று வந்துள்ளதுடன் அதனை அஸ்வின் குமாருக்கு வழங்கியுள்ளதாகவும் அவர் போலி கடனட்டை தயாரிப்பில் ஈடுபட்டுள்ளதாகவும் பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அஸ்வின் மலேசியாவில் இருந்து கொண்டுவரப்படும் பிஸாஸ்டிக்கைப் பயன்படுத்தி போலி கடனட்டை தயாரிப்பில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து இவர்கள் இருவரும் சுமார் 10 இலட்சம் ரூபாயை போலி கடனட்டைகளைப் பயன்படுத்தி மோசடி செய்துள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இவர்கள் போலி அட்டைகளைப் பயன்படுத்தி வணிக நிறுவனங்களில் இருந்து பொருட்களை கொள்வனவு செய்துள்ளனர்.

எனினும் கடனட்டையின் நிஜ உரிமையாளர்களுக்கு மட்டும் தெரிந்திருக்கும் இரகசிய இலக்கம் தெரியாத காரணத்தினால் இவர்களால் இணையத்தின் ஊடாக பொருள் கொள்வனவு எதிலும் ஈடுபடமுடியவில்லையெனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் ஒரு அட்டையை ஒரு தடவை மட்டுமே இவர்கள் உபயோகித்துள்ளனர்.போலி கடனட்டைகளைப் பயன்படுத்தி கொள்வனவு செய்த பொருட்களை சென்னை மற்றும் பெங்களூர் வீதிகளில் விற்பனை செய்துள்ளனர்.கருணாராஜ் 12 ஆம் தரம் வரை கல்வி கற்றுள்ளதுடன் கடந்த 2007 ஆம் ஆண்டிலிருந்து இத்தகைய மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளமை தெரியவந்துள்ளது.


பெங்களூரில் கடனட்டை மோசடியில் ஈடுபட்ட இரு தமிழர் கைது! Reviewed by Admin on September 01, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.