மன்னார் மாவட்டத்தில் வாகனங்களில் ஒலி பெருக்கியை பயன்படுத்தி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட தமிழ் தேசியக்கூட்டமைப்பிற்கு மாத்திரம் அனுமதி மறுப்பு-செல்வம் எம்.பி குற்றச்சாட்டு
வடமாகாண சபை தேர்தலின் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளுக்கு அனைத்துக்கட்சிகளுக்கும் வாகனத்தில் ஒலிபெருக்கியை பயண்படுத்தி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட அனுமதி வழங்கப்பட்டுள்ள போதும் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு மாத்திரம் மன்னார் மாவட்டத்திலும்,ஏனைய மாவட்டங்களிலும் அனுமதி மறுக்கப்பட்டு வருவதாக தமிழ் தேசியக்கூட்டமைபின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும்,டெலோ இயக்கத்தின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் இன்று ஊடங்களுக்கு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலு ம் குறிப்பிடுகையில்,
வடமாகாண சபைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு வேட்புமனுத்தாக்கல் செய்யப்பட்ட நாளில் இருந்து தற்போது வரை அனைத்துக்கட்சிகளும் தமது வேட்பாளர்களை அறிமுகப்படுத்தும் வகையில் வாகனங்களில் ஒலிபெருக்கிகளை கட்டி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆனால் மன்னார் மாவட்டத்திலும் ஏனைய மாவட்டங்களிலும் தமிழ் தேசியக்;கூட்டமைப்பு தமது வேட்பாளர்களை அறிமுகப்படுத்தும் வகையில் வாகனங்கிளில் ஒலி பெருக்கியினை பயன் படுத்தி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
-மன்னாரில் பொலிஸார் அனுமதி மறுத்துள்ளனர்.
ஆனால் அரச கட்சிகளுக்கும் ஏனைய கட்சிகளுக்கும் அனுமதி வழங்கப்பட்டு தற்போது பிரச்சார நடவடிக்கைகள் இடம் பெற்று வருகின்றது.
இது தொடர்பாக எமது கட்சி சார்பாக மன்னார் தேர்தல் திணைக்களத்திற்கும்,தேர்தல் கண்கானிப்பு குழுக்களிடமும் முறைப்பாடை செய்துள்ளதாக செல்வம் அடைக்கலநாதன் எம்.பி வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மன்னார் நிருபர்-
(02-09-2013)
மன்னார் மாவட்டத்தில் வாகனங்களில் ஒலி பெருக்கியை பயன்படுத்தி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட தமிழ் தேசியக்கூட்டமைப்பிற்கு மாத்திரம் அனுமதி மறுப்பு-செல்வம் எம்.பி குற்றச்சாட்டு
Reviewed by NEWMANNAR
on
September 02, 2013
Rating:
No comments:
Post a Comment