தமிழீழ விடுதலை இயக்கம் டெலோ சார்பாக வழங்கப்பட வேண்டிய அமைச்சுப்பதவி மன்னார் சட்டத்தரணி டெனிஸ்வரனுக்கு வழங்கப்பட வேண்டும்.
தமிழ் தேசியக்கூட்டமைப்பின் சார்பாக மன்னார் மாவட்டத்திற்கு வழங்கப்படவிருந்த அமைச்சுப்பதவி யாழ் மாவட்டத்திற்கு மாற்றப்பட்ட சம்பவம் மன்னார் மாவட்ட மக்கள் மத்தியில் பாரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இடம் பெற்ற வடமாகாண சபை தேர்தலில் தமிழ் தேசியக்கூட்டமைப்பு மன்னார் மாவட்டத்தில் மூன்று ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.
அதில் தமிழீழ விடுதலை இயக்கம் இரண்டு ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.
இந்த நிலையில் தமிழீழ விதலை இயக்கம் டெலோ சார்பாக வழங்கப்பட்ட ஆசனம் மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவருக்கே வழங்க தீர்மானிக்கப்பட்டது.
இந்த நிலையில் குறித்த ஆசனம் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சிவாஜீலிங்கத்திற்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதனால் தமிழீழ விடுதலை இயக்கம் டெலோ சார்பாக போட்டியிட்டு மன்னார் மாவட்டத்தில் அதிகூடிய வாக்குகளைப் பெற்ற சட்டத்தரணி பா.டெனிஸ்வரனின் ஆதரவாளர்கள் மத்தியில் பாரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
எனவே குறித்த ஆசனத்தை மன்னார் மாவட்டத்தில் டெலோ சார்பாக போட்டியிட்டு அதி கூடிய வாக்குகளை பெற்ற சட்டத்தரணி பா.டெனிஸ்வரனுக்கு வழங்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக தமிழீழ விடுதலை இயக்கம் டெலோ வின் தலைவரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதனின் கவனத்திற்கு மக்கள் கொண்டு சென்றுள்ளனர்.
இதே வேளை குறித்த அமைச்சுப்பதவியை சட்டத்தரணி டெனிஸ்வரனுக்கு வழங்க வேண்டும் என கோரி தமது கோரிக்கை அடங்கிய மகஜரை மன்னார் மாவட்ட மீனவ கூட்டுறவு சங்கங்களின் சமாசம் மற்றும் மன்னார் எருக்கலம் பிட்டி முகைதீன் பெரிய யூம்ஆ பள்ளி வாசல் ஆகியவை தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைமை பீடத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர்.
தமிழீழ விடுதலை இயக்கம் டெலோ சார்பாக வழங்கப்பட வேண்டிய அமைச்சுப்பதவி மன்னார் சட்டத்தரணி டெனிஸ்வரனுக்கு வழங்கப்பட வேண்டும்.
Reviewed by Admin
on
October 05, 2013
Rating:
No comments:
Post a Comment