அண்மைய செய்திகள்

recent
-

யாழ்தேவியில் மோதுண்டு ஒருவர் மரணம்

திருமுறிகண்டி, பொன்னகர் பகுதியில் யாழ்தேவி ரயிலில் மோதுண்டு ஒருவர் சம்பவ இடத்தில் மரணமடைந்துள்ளார்.

 இன்று திங்கட்கிழமை அதிகாலை 4.50 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. கொழும்பிலிருந்து கிளிநொச்சிக்கு வந்துகொண்டிருந்த யாழ்தேவி ரயிலில் மோதுண்டே குறித்த நபர் மரணமடைந்துள்ளார். 

 குறித்த நபர் பொன்னகர் பகுதியில் ரயில் கடவையைக் கடக்க முற்பட்டபோதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. திருமுறிகண்டி பொன்னகரைச் சேர்ந்த அன்னிமுத்து கணேஸ் (வயது 65) என்பவரே விபத்தில் மரணமடைந்துள்ளார். 

 இந்த விபத்து தொடர்பில் மாங்குளம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
யாழ்தேவியில் மோதுண்டு ஒருவர் மரணம் Reviewed by Admin on October 28, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.