வடமாகாண சபை சிறப்பாகச் செயற்படுவதற்கு இந்தியா பூரணமான ஒத்துழைப்பை வழங்கும் : குர்ஷித்
வடக்கு மாகாண சபை சிறப்பாகச் செயற்படுவதற்கும் இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கும் இந்த நாட்டு மக்கள் மகிழ்ச்சியாக வாழ்வதற்கும் தம்மாலான உதவிகளை வழங்குவதற்குத் தயாராகவுள்ளோம் எனவும் இலங்கையில் புகையிரதப் பாதை அபிவிருத்தி, துறைமுக அபிவிருத்தி, பொருளாதாரா அபிவிருத்திகள், கலாசார அபிவிருத்திகள் என்பனவற்றை மேற்கொள்வதற்கு தொடர்ந்தும் உதவிகளை வழங்குவோம் எனவும் இந்தியாவின் வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித் நேற்று யாழ்ப்பாணத்தில் தெரிவித்தார்.
இருநாள் விஜயமாக இலங்கைக்கு வந்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் உள்ளடங்கிய குழுவினர் நேற்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்து மதகுருமார், வர்த்தகர்கள், தொழில்துறை தலைவர்கள், புத்திஜீவிகள், மக்கள் பிரதிநிதிகள் ஆகியோரை யாழ்.ரில்கோ விருந்தினர் விடுதியில் சந்தித்துக் கலந்துரையாடினார்.
இச்சந்திப்பில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
வடமாகாண சபை சிறப்பாகச் செயற்படுவதற்கு இந்தியா பூரணமான ஒத்துழைப்பை வழங்கும் : குர்ஷித்
Reviewed by Admin
on
October 09, 2013
Rating:

No comments:
Post a Comment