அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் மாபெரும் உதைபந்தாட்ட போட்டி

இலங்கை உதைபந்தாட்ட சம்மேளன தலைவரின் வெற்றிக்கிண்ணத்திற்கான மன்னார் மாவட்ட கழகங்களுக்கிடையிலே மன்னார் உதைபந்தாட்ட லீக்கினால் நடாத்தப்பட்ட  உதைபந்தாட்ட போட்டியின் இறுதிப் போட்டி 03.11.2013 ஞாயிறு மாலை 3.30 மணிக்கு மன்னார் பொது விளையாட்டரங்கில் மன்னார் பனங்கட்டுக்கொட்டு சென் ஜோசப் B கழகத்துக்கும்  மன்னார் சின்னக்கடை கிறீன் பீல்ட் B கழகத்துக்கும் இடையே நடைபெறவுள்ளது.

இவ் இறுதிப்போட்டிக்கு விருந்தினர்களாக வடக்கு மாகாண சபையின் கல்வி விளையாட்டு அமைச்சர் கௌரவ தி.குருகுலராஜா அவர்களும்  வடக்கு மாகாண சபையின் மீன்பிடி போக்குவரத்து கிராமிய அபிவிருத்தி வணிகத்துறை அமைச்சரும் மண்ணின் மைந்தனுமாகிய கௌரவ பி டெனிஸ்வரன் அவர்களும்  மன்னார் நகர பிதா கௌரவ எஸ் ஞானப்பிரகாசம் அவர்களும்  இலங்கை உதைபந்தாட்ட சம்மேளன தலைவர் திரு ரஞ்சித் ரொட்றிகோ அவர்களும்  வடக்கு மாகாணத்தின் விளையாட்டுத்துறை பொறுப்பாளரும் மாகாண சபை உறுப்பினருமாகிய கௌரவ  ஆர்னோல்ட் அவர்களும்  வடக்கு மாகாண சபை உறுப்பினர்களும் மண்ணின் மைந்தர்களுமாகிய  கௌரவ பிறிமுஸ் சிறாய்வா  கௌரவ வைத்தியர் குணசீலன் ஆகியோரும் மற்றும் பல உயர் அதிகாரிகளும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

எனவே இம்மாபெரும் உதைபந்தாட்ட போட்டிக்கு அனைத்து உதைபந்தாட்ட ரசிகர்களையும் அன்புடன் அழைக்கிறோம்.

தகவல்

ப.ஞானராஜ்

லீக் செயலாளர்

மன்னார் உதைபந்தாட்ட லீக்

மன்னாரில் மாபெரும் உதைபந்தாட்ட போட்டி Reviewed by Admin on October 30, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.