அண்மைய செய்திகள்

recent
-

புலமைப் பரிசில் பரீட்சையில் வடக்கிற்கு சிறந்த பெறுபேறு

தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில் வடக்கிற்கு சிறந்த பெறுபேறுகள் கிட்டியுள்ளன.
பரீட்சையில் சித்தியடைந்தோர் எண்ணிக்கை ஒப்பீட்டளவில் ஏனைய மாகாணங்களை விடவும் வடக்கில் அதிகமாகும் எனத் தெரிவிக்கப்படுகிறது.


கடந்த ஆண்டில் புலமைப் பரிசில் பரீட்சையில் 56.05 வீதமானவர்கள் சித்தியடைந்துள்ளனர். இந்த அண்டில் அந்த எண்ணிக்கை 62.62 வீதமாக உயர்வடைந்தள்ளது.

இதன்படி வடக்கில் கடந்த ஆண்டைவிடவும் 6.57 வீதமான மாணவர்கள் பரீட்சையில் சித்தியடைந்துள்ளனர். இது ஏனைய மாகாணங்களை விடவும் சிறந்த பெறுபேறாகும்.

ஊவா மாகாணத்தில் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்தோர் வீதம் 6.10 வீதத்தினால் உயர்வடைந்துள்ளது.

மூன்றாவது இடத்தை தென் மாகாணம் பெற்றுக் கொண்டுள்ளது.

கடந்த ஆண்டை விடவும் இந்த ஆண்டில் 5.66 வீதமான மாணவர்கள் பரீட்சையில் சித்தியடைந்துள்ளனர்.
புலமைப் பரிசில் பரீட்சையில் வடக்கிற்கு சிறந்த பெறுபேறு Reviewed by Admin on October 06, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.