வடமாகாணத்தில் புதிதாக ஆறு மீன்பிடித் துறைமுகங்கள்
வடமாகாணத்தில் ஆறு புதிய மீன் பிடித்துறைமுகங்களை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சமுத்திர வள அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கமைய 200 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் முல்லைத்தீவு, மீசாலை, படுவக்கட்டை, இலங்கைத்துறை மற்றும் பளைச்சேனை ஆகிய பிரதேசங்களில் படகுகள் நங்கூரமிடல், களஞ்சியசாலை உட்பட பல வசதிகளுடன் மீன் பிடித்துறைமுகங்கள் அமைக்கப்படவுள்ளன.
இவற்றின் நிர்மாணப்பணிகள் 2014 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதமளவில் ஆரம்பிக்கப்பட்டு 2015 இல் முழுப் பணியையும் நிறைவு செய்வதற்கு தீர்மானித்துள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
அத்துடன் இலங்கையிலுள்ள சகல மீன்பிடித்துறைமுகங்களும் சர்வதேச தரத்தில் அபிவிருத்தி செய்யப்படவுள்ளதாகவும் இதனை தாய்வான் நாட்டு நிறுவனமொன்று மேற்கொள்ளவுள்ளதாகவும் அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
வடமாகாணத்தில் புதிதாக ஆறு மீன்பிடித் துறைமுகங்கள்
Reviewed by Admin
on
October 28, 2013
Rating:

No comments:
Post a Comment