அண்மைய செய்திகள்

recent
-

தேர் கட்டிடத்திலிருந்து பெண்ணின் சடலம் மீட்பு-படங்கள்

கோவிலின் தேர் கட்டிடத்திலிருந்து பெண்ணின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது. யாழ்.,கே.கே.எஸ்.வீதி நாச்சிமார் தேர் கட்டிடத்தின் மேல்பகுதியிலிருந்தே இந்த சடலம் வியாழக்கிழமை பிற்பகல் மீட்கப்பட்டுள்ளது. 

 தேர் கட்டிடத்தின் மேல்பகுதியில் துர்நாற்றம் வீசுவதாக யாழ்.பொலிஸாருக்கும் அறிவிக்கப்பட்டதையடுத்தே பொலிஸார் 35 வயது மதிக்கத்தக்க பெண்ணொருவரின் சடலத்தை மீட்டுள்ளனர். 

 தலையில் அடிகாயங்களுடனும் முகம் எரிந்த நிலையிலும் இச்சடலம் காணப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த பெண்ணை சில நாட்களுக்கு முன்னர் கொலை செய்துவிட்டு சடலத்தை இங்கு கொண்டு வந்து போட்டிருக்கலாம் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

 சடலம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை யாழ்.பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.



தேர் கட்டிடத்திலிருந்து பெண்ணின் சடலம் மீட்பு-படங்கள் Reviewed by Admin on October 18, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.