போரால் பாதிக்கப்பட்ட மன்னார் மாணவர்களுக்கு பாதணிகள் வழங்கி வைப்பு.-படங்கள்
கற்றுக்கொண்ட பாடங்கள் நல்லிணக்கம் சம்மந்தமான வேலைத்திட்டத்தின் கீழ் மன்னார் நகரசபைக்கு உட்பட்ட 8 பாடசாலையில் உள்ள போர் சூழலின் பின் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு பாதணிகள் வழங்கும் நிகழ்வு மன்னார் சர்வோதய மாவட்ட இணைப்பாளர் எஸ்.உதயகுமாரன் தலைமையில் நேற்று வியாழக்கிழமை இடம் பெற்றது.
மன்னார் சர்வோதய அமைப்பின் ஏற்பாட்டில் இடம் பெற்ற இந்த நிகழ்வில் போர் சூழலில் பின் பாதிக்கப்பட்ட 110 மாணவர்களுக்கு பாதணிகள் வழங்கி வைக்கப்படது.
இந்த நிகழ்வில் கற்றுக்கொண்ட பாடங்கள் நல்லிணக்கத்திற்கான நிகழ்ச்சித்திட்ட இணைப்பாளர் எம்.கேமமாலி பெரேரா மற்றும் அவருடன் சேவையாற்றும் பணியாளர்கள்,மன்னார் நகரசபை உப தலைவர் ஜேம்ஸ் ஜேசுதாசன், மன்னார் பிரதேசசபையின் உப தலைவர் ஏ.சகாயம்,தேசோதய குழுவினர்,சர்வோதய ஊழியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
போரால் பாதிக்கப்பட்ட மன்னார் மாணவர்களுக்கு பாதணிகள் வழங்கி வைப்பு.-படங்கள்
Reviewed by Admin
on
October 04, 2013
Rating:

No comments:
Post a Comment