அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் பிரஜைகள் குழு பொன்தீவுகண்டல் பகுதியிற்கு விஜயம் - படங்கள்

 மன்னார் பொன்தீவுகண்டல் பகுதியில் காணிகள் அபகரிக்கப்படுவதாக தெரிவித்து நானாட்டான் பிரதேச செயலகத்திற்கு முன் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தை அடுத்து மன்னார் பிரஜைகள் குழு குறித்த காணிபகுதிக்குச் சென்று சம்பந்தப்பட்ட இடத்தை பார்வையிட்டதுடன் பிரச்சினை தொடர்பாக மக்களுடன் கலந்துரையாடியுள்ளனர்.

பிரஜைகள்  குழவின் தலைவர் அருட்தந்தை செபமாலை அவர்களின் தலைமையில் சென்ற குழு குறித்த சந்திப்பில் ஈடுபட்டுள்ளது.

குறித்த சந்திப்பின் போது பிரஜைகள் குழவின் செயலாளர் திரு.சிந்தாத்துரை, தேசிய மீனவ ஒத்துளைப்பு இயக்கத்தின் மன்னார் மாவட்ட இணைப்பாளர் திரு.சுனேஸ் சோசை ஆகியோர் மக்கள்; சந்திப்பில் கலந்து கொண்டனர்.

இதேவேளை குறித்த பகுதியில் வட மாகாண சபை உறுப்பினர் பிறிமூஸ் சிராய்வா,நானாட்டான் பிரதேச செயலாளர் எஸ்.சந்திரையா ,நானாட்டான் பிரதேச சபை உறுப்பினர் சகாப்தீன் உள்ளிட்ட பலர் மக்கள் பிரச்சினை தொடர்பில் கலந்துரையாடி பிரச்சினைகளை தீர்ப்பதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக விரிவாக ஆராய்ந்தனர்.

லுயிஸ் மாசல்






மன்னார் பிரஜைகள் குழு பொன்தீவுகண்டல் பகுதியிற்கு விஜயம் - படங்கள் Reviewed by Author on October 28, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.