அண்மைய செய்திகள்

recent
-

புதிதாக தேசிய பாடசாலைகளாக உள்வாங்கப்பட்ட பாடசாலைகளுக்கு தகுதியான அதிபர்களைத் தெரிவு செய்யும் விண்ணப்பம் எப்போது கோரப்படும்

கல்வி அமைச்சினால் புதிதாக தேசிய பாடசாலைகளாக உள்வாங்கப்பட்டுள்ள பாடசாலைகளுக்கு தகுதியான அதிபர்களை நியமிப்பதற்காக விண்ணப்பங்கள் எப்போது கோரப்படும் என தகுதிபெற்றோர் காத்துக்கொண்டு இருக்கின்றனர்.தேசிய பாடசாலையாக உள்ள பாடசாலைகள் நேரடியாக கல்வியமைச்சின் கீழேயே செயற்படுகின்றன.

சுற்றுநிருபத்தின்படி தேசிய பாடசாலைகளுக்கு இலங்கை கல்வி நிருவாக சேவையைச் சேர்ந்த தரம் 02, தரம் 03 சேர்ந்த உத்தியோகத்தோர்,அல்லது அதிபர் சேவை தரம் 01 ஐச் சேர்ந்த ஒருவரே நியமிக்கப்பட வேண்டும்.
ஆனால், புதிதாக தேசிய பாடசாலைகளாக உள்வாங்கப்பட்ட பல பாடசாலைகளில் பதிலதிபராகக் கடமை புரிந்த பின்னர் அதிபராக
உள்வாங்கப்பட்டோரே கடமை புரிகின்றனர் இவர்களை விடுத்து தேசிய பாடசாலைகளுக்கு உரிய தகுதிகள் உடைய அதிபர்கள் நியமிக்கப்படும் போதே பாடசாலையின் கட்டமைப்பும், கல்வித்தரமும் உயர்ந்து செல்லும் என பிரதேச கல்வியாளர்களும் , பத்திஜீவிகளும் கருத்துத் தெரிவிக்கின்றனர்.

(கே.சி.எம்.அஸ்ஹர்)
புதிதாக தேசிய பாடசாலைகளாக உள்வாங்கப்பட்ட பாடசாலைகளுக்கு தகுதியான அதிபர்களைத் தெரிவு செய்யும் விண்ணப்பம் எப்போது கோரப்படும் Reviewed by NEWMANNAR on October 12, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.