சமுர்த்திப் பயனாளிகளுக்கு சமூகப் பாதுகாப்பு நிதி
வவுனியாவிலுள்ள சமுர்த்திப் பயனாளிகளுக்கு சமூகப் பாதுகாப்பு நிதி இன்று புதன்கிழமை வழங்கப்பட்டன.
வவுனியா வடக்கு பிரதேச செயலக சமுர்த்தி அலுவலகத்தில் வவுனியா வடக்கு சமுர்த்தி முகாமையாளர் இ.இரட்னபாலன் தலைமையில், 10 பயனாளிகளுக்கு சமூகப் பாதுகாப்பு நிதிக்கான காசோலைகள் வழங்கப்பட்டன.
10 பேருக்கும் வழங்கப்பட்ட இந்நிதியுதவி வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெற்றமை, பிரசவம் மற்றும் மரணச் செலவுக்காக வழங்கப்பட்டன.
சமுர்த்திப் பயனாளிகளுக்கு சமூகப் பாதுகாப்பு நிதி
Reviewed by NEWMANNAR
on
November 27, 2013
Rating:

No comments:
Post a Comment