வடக்கு கடற்பரப்பில் மூழ்கிய பழமையான கப்பல்கள் கண்டுபிடிப்பு
வடக்கு கடற்பரப்பில் மூழ்கிய மூன்று பழைமையான கப்பல்களை மத்திய கலாசார நிதியத்தின் சமுத்திரவள தொல்பொருள் ஆராய்ச்சிப் பிரிவு கண்டுபிடித்துள்ளது.
வடக்கில் யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதைத் தொடர்ந்து வடமாகாணத்திற்குரிய கடற் பரப்பில் சமுத்திரவள தொல்பொருள் ஆராய்ச்சிப் பிரிவு ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது.
இந்த ஆய்வுகளின்போது குறித்த மூன்று பழமையான கப்பல்களும் கண்டுபிடிக்கப்பட்டதாக தொல்பொருள் ஆய்வாளர் ரசிக்க முத்துகுமாரண தெரிவித்துள்ளார்.
இந்த கப்பல்கள் தொடர்பில் மேலும் பல ஆய்வுகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வடக்கு கடற்பரப்பில் மூழ்கிய பழமையான கப்பல்கள் கண்டுபிடிப்பு
Reviewed by NEWMANNAR
on
November 24, 2013
Rating:

No comments:
Post a Comment