காணாமற் போனோரின் உறவுகளால் தடுக்கப்பட்ட இரா.சம்பந்தன்
பிரித்தானிய பிரதமர் டேவிட் கெமரூனுடனான சந்திப்பை முடித்துக்கொண்டு யாழ். பொது நூலகத்தினை விட்டு வெளியில் வந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுத் தலைவர் இரா.சம்பந்தரின் வாகனத்தை, காணாமற் போனோரின் உறவினர்கள் முற்றுகையிட்டனர்.
அத்துடன், தங்களை பிரித்தானிய பிரதமரைச் சந்திக்கவிடவில்லையென கோஷமெழுப்பியவாறு அவர்கள் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். தொடர்ந்து பொலிஸார் நூலகத்தின் பின்வாயில் வழியாக சம்பந்தரை பாதுகாப்புடன் அனுப்பி வைத்தனர்.
வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் பிரித்தானிய பிரதமருக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர் மதியாபரணன் ஆபிரகாம் சுமந்திரன் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. கலந்துகொண்டிருந்தனர்.
காணாமற் போனோரின் உறவுகளால் தடுக்கப்பட்ட இரா.சம்பந்தன்
Reviewed by NEWMANNAR
on
November 15, 2013
Rating:
Reviewed by NEWMANNAR
on
November 15, 2013
Rating:


No comments:
Post a Comment