அனுமதி மறுக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்ட முதலமைச்சர்
வலிகாமம் வடக்கிலுள்ள உள்ள பொதுமக்களின் காணிகள் படைத்தரப்பால் அபகரிக்கப்பட்டு அங்குள்ள வீடுகள், கோயில்கள் மற்றும் பாடசாலைகள் ஆகியன படையினரால் உடைக்கப்படுகின்றன.இந்த நிலவரங்களை பார்வையிடுவதற்கு குறித்த பகுதிக்கு வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் சென்றுள்ளார்.
எனினும் அவர் உள்ளே செல்ல அனுமதிக்காமல் படைத்தரப்பு அவரை திருப்பி அனுப்பியுள்ளதாக முதலமைச்சரின் பிரத்தியேக செயலாளர் தெரிவித்தார்.முதலமைச்சரை மாவிட்டபுரம் பகுதியில் மறித்த பாதுகாப்பு படையினர், உயர் பாதுகாப்பு வலயத்திற்குள் செல்வது என்றால் பாதுகாப்பு அமைச்சின் அனுமதி பெற வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
அவ்வாறு அனுமதி இல்லாவிட்டால் உள்ளே செல்ல அனுமதிக்கப்படமாட்டாது எனவும் படைத்தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
அனுமதி மறுக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்ட முதலமைச்சர்
Reviewed by Author
on
November 29, 2013
Rating:

No comments:
Post a Comment