மன்னார் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள்,கால்நடை வளர்ப்போருக்கான கலந்துரையாடல்
மன்னார் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்போருக்கான அவசர கலந்துரையாடல் ஒன்று எதிர்வரும் 26 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணிக்கு மன்னார் உயிலங்குளத்தில் அமைந்துள்ள மாவட்ட விவசாய பயிற்சி நிலையத்தில் இடம் பெறவுள்ளதாக பிரதி விவசாய விரிவாக்கல் பணிப்பாளர் தெரிவித்தார்.
இதன் போது விவசாய கமநலசேவைகள்,கால்;நடை அபிவிருத்தி,நீர்ப்பாசன மற்றும் சுற்றாடல் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் அவர்களும் கலந்த கொள்ளவுள்ளார்.
எனவே இக்கலந்துரையாடலில் அனைத்து விவசாய அமைப்பு மற்றும் கால்நடை வளர்ப்போர் சங்கங்களின் பிரதிநிதிகள் ஆகியோரை கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
மன்னார் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள்,கால்நடை வளர்ப்போருக்கான கலந்துரையாடல்
Reviewed by Author
on
November 23, 2013
Rating:

No comments:
Post a Comment