மன்னார் பிரதான தனியார் பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டு வரும்; நவீன முறையிலான பொது மலசலகூடம் -படங்கள்
புதிய நவீனமுறையிலான பொது மலசலகூடம் ஒன்று மன்னார் தனியார் பிரதான பேருந்து தரிப்பு நிலையத்தில் அரசாங்கத்தின் நிதி; உதவியுடன் அமைக்கப்பட்டு வருகின்றது.
தேசிய நீர்வழங்கல் அமைச்சின் ஏற்ப்பாட்டிற்கு அமைவாக குறித்த நவீன பொது மலசலகூடம் அமைக்கப்பட்டு வருகின்றது.
குறித்த பிரதான பேருந்து நிலையத்தில் நெடுங்காலமாக பொது மலசலகூடம் ஒன்று இல்லாத நிலை காணப்பட்டது. இதனால் உள்ளுர் மற்றும் வெளியூர் பயணிகள் பல சிரமங்களுக்கு முகம் கொடுத்து வந்தனர்.
இது தொடர்பாக பல முறை குறித்த பொது மலசலகூடத்தை அமைத்து தரும்படி பல கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் குறித்த பிரதான பொது தனியார் பேருந்து நிலையத்தில் நவீனமுறையிலான பொது மலசல கூடம் ஒன்றை அமைத்து கொடுப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதன் அடிப்படையில் அரசாங்கம் மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியின் மூலம் நவீன பொது மலசலகூடம் அமைக்கப்பட்டு வருகின்றது.
இதற்கென 5.4 மில்லியன் ரூபாய்(5,411,324.00) ஒதுக்கப்பட்டு அபிவிருத்தி வேலைகள் துரித கதியில் நடைபெற்று வருகின்றது.
குறித்த நவீன மலசலகூடம் அமைத்து கொடு;ப்பதன் மூலம் பயணிகள் அசௌகரியமின்றி தமது பயணங்களை மேற்கொள்வதற்கு வழியமைத்து கொடுக்கப்பட்டுள்ளது.
மன்னார் பிரதான தனியார் பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டு வரும்; நவீன முறையிலான பொது மலசலகூடம் -படங்கள்
Reviewed by Author
on
November 23, 2013
Rating:
No comments:
Post a Comment