டெங்கு நுளம்புகளை ஒழிக்கும் தீவிர நடவடிக்கை இன்று முதல்.
நாடு முழுவதிலும் 424 பொலிஸ் பிரிவுகளில் உள்ள பாடசாலைகளின் சுற்றாடல்களில்
டெங்கு நுளம்புகள் பெருகுவதைத் தடுக்கும் தீவிர நடவடிக்ககைகள் இன்று 26 ஆம் திகதி முதல் இ்டம்பெறவுள்ளதாக சுகாதரா அமைச்சு அறிவித்துள்ளது .
விடுமுறைக்குப் பின்னர் மீண்டும் பாடசாலைகள் ஜனவரியில் ஆரம்பிக்கப்படவிருப்பதால் மாணவர்களின் பாதுகாப்பை முன்னிட்டு கொழும்பு பொலிஸ் தலைமையகமும் சுகதார அமைச்சும் ஒன்றிணைந்து இந்த நடவடிக்கையை மேற்கொள்கின்றன .
பாடசாலைச் சுற்றாடலைத் தூய்மைப்படுத்தும் இந்த நடவடிக்கைகளுக்கு ஒத்தழைப்பு வழங்காத கல்வித் திணைக்கள அதிகாரிகள் மற்றும் பாடசாலை அதிபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது
டெங்கு நுளம்புகளை ஒழிக்கும் தீவிர நடவடிக்கை இன்று முதல்.
Reviewed by Admin
on
December 26, 2013
Rating:

No comments:
Post a Comment