அண்மைய செய்திகள்

recent
-

காணி­களை வழங்­கு­வ­தாக கூறி பண­மோ­சடி மக்­கள் அவ­தா­ன­மாக இருக்­க வேண்டும் த. தே.கூ. அறி­விப்பு

யாழ்.குடா­நாட்டில் வீட்­டுத்­திட்ட சங்கம் என்ற பெயரில் மக்­க­ளுக்கு காணி­களை வழங்­கு­வ­தாக மோசடி நட­வ­டிக்­கையில் ஈடு­பட்­டி­ருந்த சிலர் நேற்று சாவ­கச்­சேரி பொலி­ஸா­ரினால் கைது­செய்­யப்­பட்­டுள்ள நிலை­யில்­ இவ்­வா­றான மோச­டி­யா­ளர்­க­ளிடம் மிக அவ­தா­ன­மாக இருக்­கு­மாறு தமிழ்­தே­சிய கூட்­ட­மைப்பு மக்­களை கேட்­டுள்­ளது.


சாவ­கச்­சே­ரி-­ - கை­தடி பகு­தியில் காணி­களை வழங்­கு­வ­தாக தனி­யா­ருக்குச் சொந்­த­மான காணி­க­ளுக்­கான போலி ஆவ­ணங்­களை பெற்­றி­ருக்கும் ஒரு கும்பல் மக்­க­ளிடம் 16ஆயிரம் தொடக்கம் 20 ஆயிரம் ரூபா வரை­யி­லான பணத்தை பெற்­றி­ருக்­கின்­றது. அதனை உன்­மை­யென நம்­பிய யாழ்ப்­பாணம் மற்றும் கிளி­நொச்சி மாவட்ட மக்கள் சிலர், மோச­டி­யா­ளர்கள் கேட்ட பணத்தை செலுத்­தி­யுள்­ளனர்.

இந்­நி­லையில் மேற்­படி குழு­வினர் கைதடி யில் நேற்று காணி­களை வழங்­கு­வ­தாக கூறி மக்­க­ளிடம் பதி­வு­களை மேற்­கொண்­டி­ருந்த நிலையில் தக­வ­ல­றிந்த தமிழ்­தே­சிய கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சுரேஷ் பிரே­மச்­சந்­திரன் குறித்த பகு­திக்கு சென்­றுள்ளார்.

சம்­பவம் குறித்து அவர் கருத்து தெரி­விக்­கையில்,

வீட்­டுத்­திட்ட சங்கம் என்ற பெயரில் காணி இல்­லாத மக்­க­ளுக்கு காணி­களை வழங்கப் போவ­தாக கூறி ஒவ்­வொ­ரு­வ­ரி­ட­மி­ருந்தும் 16ஆயிரம் தொடக்கம் 20ஆயிரம் ரூபா பணத்தை பெற்­றி­ருக்­கின்­றார்கள். நாம் அங்கே சென்­ற­போது அவர்கள் 92 பேரின் பெயர்­களை பதிவு செய்­தி­ருந்­தார்கள்.

பதிவு நட­வ­டிக்­கையில் ஒருவர் மட்டும் ஈடு­பட்­டி­ருந்தார். நாம் அவ­ரிடம் கேட்டோம் காணி­களை மக்­க­ளுக்கு வழங்­கு­வ­தற்கு உங்­க­ளுக்கு யார் அனு­மதி கொடுத்­தது? மக்­க­ளுக்கு வழங்கும் காணிகள் யாரு­டை­யவை? என ஆனால் இந்தக் கேள்­வி­க­ளுக்கு அவ­ரிடம் சரி­யான பதில் இல்லை. ஆனால் அங்கு பதிவு நட­வ­டிக்­கையில் ஈடு­பட்­டி­ருந்­தவர், இரு­வ­ருக்கு தொலை­பேசி அழைப்பை எடுத்தார்.

ஒருவர் கொழும்பில் இருப்­ப­தா­கவும் மற்­றவர் யாழ்ப்­பா­ணத்தில் இருப்­ப­தா­கவும் கூறினார். ஆனால் அவரால் தன்னை சரி­யாக அடை­யா­ளப்­ப­டுத்த முடி­யாத நிலையில் அங்கே பொலிஸார் வர­வ­ழைக்­கப்­பட்டு அவர் கைது­செய்­யப்­பட்டு கொண்டு செல்­லப்­பட்­டார்.

இதற்கு முன்­ன­தாக நாம் இந்த விடயம் தொடர்பில் யாழ்.மாவட்ட அர­சாங்க அதி­ப­ருடன் தொடர்பு கொண்டு கேட்­ட­போது தமக்கு அவ்­வாறு எதுவும் தெரி­யாது. தமக்கும் அவர்­க­ளுக்கும் எந்தத் தொடர்பும் கிடை­யாது என கூறினார். பின்னர் தேசிய வீட­மைப்பு அதி­கா­ர­ச­பை­யுடன் தொடர்பு கொண்­ட­போது அவர்­களும் தங்களுக்கு இதில் தொடர்­பில்லை என கூறி­விட்­டார்கள்.

எனவே மிக மோச­டி­யான முறையில் தமிழ் மக்­களை ஏமாற்­று­வ­தற்­காக ஒரு கும்பல் குடா­நாட்­டிற்குள் முகா­மிட்­டி­ருக்­கின்­றது. அங்கே காணி பெற வந்­தி­ருந்த பெண் ஒருவர் கூறினார். தன்­னிடம் மிச்­ச­மாக இருந்த சில நகை­களை அடகு வைத்தும், விற்­றுமே காணிக்­கான பணத்­தினை அவர்­க­ளிடம் வழங்­கி­ய­தாக. இவ்­வாறு பல மக்கள் தங்கள் இய­லா­மைக்கும் மத்­தியல் ஏமாற்­றப்­பட்­டுள்­ளார்கள். ஏமாற்­றப்­பட்டுக் கொண்­டி­ருக்­கின்­றார்கள்.

ஏற்­க­னவே யுத்­தத்­தினால் பாதிக்­கப்­பட்டு ஏதி­லி­க­ளாக வாழ்ந்து கொண்­டி­ருக்கும் மக்­களை ஏமாற்றும் இத்­த­கைய மோசடி பேர்­வ­ழி­களை நாம் அடையாளம் காணவேண்டும். மக்கள் இவர்கள் விடயத்தில் மிக விழிப்பாக இருக்கவேண்டும். மேலும் தமிழ்தேசிய கூட்டமைப்பு இத்தகைய மோசடி பேர்வழிகளை கட்டுப்படுத்துவது மற்றும் சட்டத்தின் முன் நிறுத்துவது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுப்பதற்காக சம்மந்தப்பட்ட அதிகாரிகளுடன் பேசும் எனவும் அவர் தெரிவித்தார்.
காணி­களை வழங்­கு­வ­தாக கூறி பண­மோ­சடி மக்­கள் அவ­தா­ன­மாக இருக்­க வேண்டும் த. தே.கூ. அறி­விப்பு Reviewed by NEWMANNAR on December 09, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.