அண்மைய செய்திகள்

recent
-

மரப்பட்டறை நடத்திய ஆறு பேருக்கு விளக்கமறியல்

முள்ளியவளை பொலீஸ் பிரிவுக்குற்பட்ட மதவாளன்சிங்கம் குளம், புதன்வயல் பிரதேச காட்டுப்பகுதிக்குள் சட்டவிரோதமாக மரப்பட்டறையொன்றை நடத்திவந்ததாகக் கூறப்படும் ஆறு பேரையும் எதிர்வரும் 24ஆம் திகதி விளக்கமறியளில் வைக்குமாறு முல்லைத்தீவு மாவட்ட மற்றும் நீதவான் நிதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜா செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளார். 

 மிக நீண்ட காலமாக முள்ளியவளை மதவாளசிங்கம் குளம் பூதன்வயல் பிரதேச காட்டு பகுதிக்குள் குறித்த சந்தேக நபர்கள் நீண்ட நாட்களாக இந்த சட்டவிரோத மரப் பட்டறையை நடத்தி வந்துள்ளனர். எனினும் விஷேட அதிரடிப்படையினரால் கடந்த திங்ட்கிழமை குறித்த பிரதேசம் முற்றுகையிடப்பட்டு சந்தேகநபர்கள் ஆறு பேர் கைது செய்யப்பட்டு முள்ளியவளை பொலிஸாரிடம் ஒப்படைத்தனர். 

 இவ்வாறு சட்டவிரோத மரப் பட்டறையை நடத்தி வந்த உரிமையாளர் உள்ளிட்ட அங்கு பணிபுரிந்த தொழிலாளர்கள் என ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், குறித்த மரப்பட்டறையில் இருந்த சுமார் இரண்டு இலட்சம் ரூபாவுக்கும் கூடுதலான முதுரை மற்றும் பாலை மரத்துண்டுகளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். 

 இவ்வாறு விஷேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டு முள்ளியவளை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட ஆறு பேரும் நேற்றைய தினம் ஆஜர்படுத்தப்பட்டனர். இதன்போது அந்த ஆறு பேரையும் இம்மாதம் 24ஆம் திகதி வரை விளக்கமறியளில் வைக்குமாறு முல்லைத்தீவு மாவட்ட மற்றும் நீதவான் நிதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜா உத்தரவிட்டுள்ளார்.
மரப்பட்டறை நடத்திய ஆறு பேருக்கு விளக்கமறியல் Reviewed by Admin on December 19, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.