பார்வையற்றோர் சங்கத்திற்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைப்பு
கிளிநொச்சி பார்வையற்றோர் சங்க அங்கத்தவர்களுக்கு சுவிஸ் புலம்பெயர்ந்தோர் அமைப்பான 'எழுகை' என்றும் அமைப்பினால் உலர் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன.
இந்த உலர் உணவு வழங்கும் நிகழ்வு வன்னி பார்வையற்றோர் சங்கத்தின் தலைவர் அ.ரூபராசா தலைமையில் சனிக்கிழமை (21) கிளிநொச்சி பரந்தனில் அமைந்துள்ள வன்னி பார்வையற்றோர் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது.
பொருட்களை வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் பார்வையற்ற சங்க அங்கத்தவர்களுக்கு வழங்கி வைத்தார்.
வன்னிப் பகுதியில் பார்வையிழந்தவர்களுக்கு எழுகை அமைப்பினால் சுழற்சி முறையில் மாதாந்தம் இந்த உலர் உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
பார்வையற்றோர் சங்கத்திற்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைப்பு
Reviewed by Admin
on
December 24, 2013
Rating:
No comments:
Post a Comment