வடக்கு பிரதிக் காவல்துறை மா அதிபர் நியமனம் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதிருப்தி
வடக்கு பிரந்தியத்திற்கான பிரதிக் காவல்துறை மா அதிபராக பூஜித் ஜயசுந்தர நியமிக்கப்பட்டமைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதிருப்தி வெளியிட்டுள்ளது.
பிரதிக் காவல்துறை மா அதிபர் நியமனம் குறித்து வட மாகாண முதலமைச்சருடன் கலந்தாலோசிக்கவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
பிரதிக் காவல்துறை மா அதிபர் ஓருவரை நியமிப்பது தொடர்பில் முதலமைச்சரின் கருத்துக்களை பெற்றுக் கொள்ள வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.
வட மாகாணத்திற்காக நியமிக்கப்பட்ட காவல்துறை அதிகாரியுடன் தமக்கு எவ்வித கருத்து முரண்பாடும் கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மாகாண செயலாளர், பிரதிக் காவல்துறை அதிபர் போன்ற நியமனங்களின் போது முதலமைச்சரின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டுமென அரசியல் சாசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். ஆளுனரை பதவி விலக்குவது தொடர்பில் மாகாண சபையில் தீர்மானமொன்றை நிறைவேற்ற உத்தேசித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
வடக்கு பிரதிக் காவல்துறை மா அதிபர் நியமனம் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதிருப்தி
Reviewed by Admin
on
December 14, 2013
Rating:
Reviewed by Admin
on
December 14, 2013
Rating:


No comments:
Post a Comment