க.பொ.த.சாதாரண தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் சிறந்த பெறுபேறுகளை பெற்று மாவட்டதுக்கு பெருமை சேர்க்க தமது ஆசிகளை கூறியுள்ளார் றிசாத் பதியுதீன் .
நாளை ஆரம்பமாகும் கல்வி பொதுத்தராதர சாதாரண தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் சிறந்த பெறுபேறுகளை பெற்று மாவட்டதுக்கு பெருமை சேர்க்க தமது ஆசிகளை தெரிவிப்பதாக வன்னி மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவரும்,கைத்தொழில் வணிகத் துறை அமைச்சருமான றிசாத் பதியுதீன் கூறியுள்ளார்.
கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை என்பது மாணவர்களின் அடுத்து அடைவு மட்டத்தை மதிப்பிடும் மிகவும் முக்கியமானதொரு பரீட்சை என்பதை மாணவர்கள் நினைவில் வைத்துக் கொண்டு பரீட்சையினை எதிர் கொள்ள வேண்டும்.உயர் கல்வி கற்பதற்கு தேவையான அடிப்படை தராதரத்தை பெறும் இந்த பரீட்சையின் பெறுபேறுகளை எதிர்காலத்தை தீர்மானிக்கும் ஒன்றாக அமையும் என்றும் அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
நாடாளாவிய ரீதியில் மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றவுள்ள நிலையில் வடக்கிலும் மாணவர்கள் இப்பரீட்சையினை எழுதுகின்றனர்.கடந்த காலங்களை போலல்லாது மாணவ சமூகம் வடக்கில் அதி கூடிய பரீட்சை பெறுபேறுகளை பெற்று,உயர் கல்வி கற்பதற்கும்,எமது மாவட்டத்தின் கல்வி மேம்பாட்டுக்கும் ஆக்க பூர்வமான பங்களிப்பினை மாணவர்கள் இப்பரீட்சை பெறுபேற்றின் முடிவு மூலம் நிரூபிப்பார்கள் என தான் நம்புவதாகவும்,பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் நல்ல பெறுபேற்றினை அடைந்து கொள்ள தான் பிரார்த்திப்பதாகவும் அமைச்சர் றிசாத் பதியுதீன் மேலும் தெரிவித்துள்ளார்.
க.பொ.த.சாதாரண தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் சிறந்த பெறுபேறுகளை பெற்று மாவட்டதுக்கு பெருமை சேர்க்க தமது ஆசிகளை கூறியுள்ளார் றிசாத் பதியுதீன் .
Reviewed by NEWMANNAR
on
December 09, 2013
Rating:
Reviewed by NEWMANNAR
on
December 09, 2013
Rating:
.jpg)

No comments:
Post a Comment